Friday, April 13, 2007

சோதனை பதிவு 13 ஏப்ரல்

சோதனை பதிவு 13 ஏப்ரல்

18 Comments:

Blogger குழலி / Kuzhali said...

http://muelangovan.blogspot.com/2010/01/blog-post_27.html
// கம்ப்ïட்டர்களில் தமிழ் எழுத்துக்களை மிக, மிக சுலபமாக பயன்படுத்த இனி வரும் எழுத்து சீர் திருத்தம் உதவும் என்று எதிர்பார்க் கப்படுகிறது.
//
மேலோட்டமாக பார்க்கும்போது இது சரி என்று தோன்றலாம், ஆனால் கணிணி தமிழ் சார்ந்த சில முயற்சிகளை மேற்கொண்டபோது, இந்த எழுத்து சீர்திருத்தம் என்பது மேலும் சுமையாகத்தான் அமையும்... இது ஒரு தமிழ் எழுத்திற்க்கு மூன்று மடங்கு இடம்(memory space) அடைத்துக்கொள்ள தான் ஏதுவாகும்... மேலும் இதுவரை வெளிவந்த புத்தகங்கள் இணைய கணிணி கட்டுரைகளையும் மாற்ற வேண்டும்,சரி இதனால் முந்தைய எழுத்து சீர்திருத்தத்தால் கிடைத்த பலனை போல் ஏதாவது கிடைத்தால் பரவாயில்லை, ஆனால் அப்படியாக எதுவும் கிடைக்கப்போவதில்லை அதனால் இது தேவையில்லை

6:52 PM  
Blogger குழலி / Kuzhali said...

http://truetamilans.blogspot.com/2010/04/blog-post_03.html
//ஏற்கனவே விடுதலைப் புலிகளைக் காரணம் காட்டித்தான் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. 1991 தேர்தலில் இவர்களால்தான் பயங்கர அடி வாங்கினார். இவர்களால் இழந்தது போதாதா.
//
விடுதலைபுலிகளால் திமுக எதையும் இழக்கவில்லை ஆனால் திமுக வால் எல்லாவற்றையும் விடுதலைபுலிகள் இழந்துள்ளனர், அன்றைய முதல்வர் எம்ஜிஆர் அவர்கள் போராளிகளை சந்திக்கிறார் என்றவுடன் அவர் சந்திப்பதற்க்கு முதல் நாள் நரித்தனத்துடன் எதிர்கட்சி தலைவர் கருணாநிதி போராளி தலைவர்களை சந்தித்து போட்டோவுக்கு போஸ் கொடுத்தார் போராளி அமைப்புகளுக்குள் தன் அசிங்க அரசியலை திணித்தார் கருணாநிதி, மேலும் ஈழத்திற்காக கருணாநிதி ஆட்சி கலைக்கப்படவில்லை, "நயனம்" என்ற பதிவர் இவர் ஒரு (முன்னாள்) திமுக அனுதாபியும் கூட அவர் எழுதிய பதிவிலிருந்து சில வரிகள்

1) கருணாநிதி ஏற்கனவே இரண்டு முறை
ஈழத்தமிழர்களுக்காக ஆட்சியை இழந்தாரா?

இல்லை.


1976-ல் இந்திராகாந்தி அம்மையார்
அவசரகாலம் அறிவித்து நாடெங்கும்
நெருக்குதலுக்கு ஆன போது
அதை எதிர்த்தார் கருணாநிதி.
அந்தச் சமயம் மலையாளியான
ம.கோ.இராமச்சந்திரனை வைத்து
தி.மு.க உடை பட்டிருந்த காலத்தில்,
ம.கோ.இராவிடம் கூட்டு வைத்துக்
கொண்ட இந்திராகாந்தி, தங்களிருவர்
விருப்பத்திற்கிணங்க
தி.மு.க ஆட்சியைக் கலைத்தார்கள்.


1991ல் கலைக்கப்பட்ட காரனங்கள்:


மண்டல் பரிந்துரையை நிறுவனப்
படுத்திய மாண்புமிகு வி.பி.சிங்
அவர்களை ஆதரித்ததால் இந்தியாவின்
ஆதிக்க சக்திகள் கட்சி வேறுபாடின்றி
திரண்டிருந்தன.


தமிழகம் தவமாய் தவமிருந்து
பெற்ற பெறற்கரிய பேறான
செயலலிதா அம்மையார் தமிழகத்திற்காக
அல்லும் பகலும் உழைக்க
ஆட்சியைப் பிடிக்கத் திட்டமிட்டிருந்தார்.



இராசீவ் காந்தியுடன் கூட்டணி
வைத்திருந்தார். இராசீவும், செயலலிதாவும்
வி.பி.சிங்கிற்கும் மண்டலுக்கும் எதிரானவர்கள்.
இருவரும் சேர்ந்து சனநாயகத் திருச்சேவை
செய்து பொம்மை அரசின் தலைவராக
இருந்த சந்திரசேகரை வைத்து கருணாநிதி
ஆட்சியைக் கலைத்தனர்.


ஆக, 1976ல் ம.கோ.இராவும் இந்திராகாந்தி
அம்மையாரும் தி.மு.க ஆட்சியை கலைத்தனர்.

1991ல் ம.கோ.இராவின் வாரிசும்,
இந்திராகாந்தியின் வாரிசும் கலைத்தார்கள்.

இங்கு எங்கேயும் ஈழத்தமிழர் என்ற
விவகாரம் இல்லை.

2) செயலலிதாவும் சில உதிரிகளும்
1991ல் ஆட்சியைக் கலைக்க, தி.மு.க
விடுதலைப் புலிகள் ஆதரவு
கொண்ட கட்சி என்று
பேசியதால்தான் ஆட்சி
கலைந்தது என்றார்களே?


1991ல் கருணாநிதி ஆட்சி கலைக்கப்
பட்ட போது விடுதலைப் புலிகள் இயக்கம்
இந்தியாவில் தடை செய்யப் பட்ட
இயக்கம் அல்ல.

1991 சனவரியில் தி.மு.க ஆட்சி கலைக்கப்
பட்ட பின்னர் அதே ஆண்டு மே மாதம்
நடக்கவிருந்த தேர்தலுக்குச் சில நாள்கள்
முன்னர்தான் இராசீவ் காந்தி
கொல்லப் பட்டார்.

இராசீவ் கொலைக்குப் பின்னர்தான்
விடுதலைப் புலிகள் இயக்கத்தினர்
மேல் தடை கொண்டு வரப் பட்டது.
அதற்குப் பின்னர்தான் அவர்களுக்கு
எதிரான பிரச்சாரம் வலுவாகச்
செய்யப்பட்டது.

அதொடு, தி.மு.க என்றைக்குமே,
விடுதலைப் புலிகளை ஆதரித்தவர்
இல்லை என்பது "உரோ" அமைப்பிற்கும்
காங்கிரசிற்கும் நன்கு தெரியும்.

ஆகவே ஈழத்தமிழர் சரவலால் ஆட்சியை
இழந்தோம் என்று தி.மு.க சொல்ல முடியாது.

ம.கோ.இரா, இந்திரா, வி.பி.சிங், இராசீவ்,
செயலலிதா ஆகியோரின் செயல்பாடுகளை
ஈழத்தமிழரைக் கொண்டு மறைக்கக்
கூடாதல்லவா?

http://nayanam.blogspot.com/2009/01/raqs-recently-asked-qns-on-dmk-part1.html எழுதியதி

9:05 PM  
Blogger குழலி / Kuzhali said...

http://blog.tamilsasi.com/2010/03/health-care-reform-tamilnadu-insurance.html

காப்பீட்டு திட்டங்களின் சாதக பாதகங்களை தாண்டி அவைகள் லாப நட்டங்கள் கிட்டத்தட்ட ஒரு லாட்டரி நிறுவனம் போல,

இலட்சம் பேர் ஆளுக்கு இரண்டு ரூபாய் கட்டி லாட்டரி டிக்கெட் வாங்கி அதில் முதல்பரிசு ஒரு இலட்சத்தை ஒருவன் பெறுவது இரண்டு ரூபாய் என்ற சிறிய பணத்தை இரண்டு இலட்சம் பேர் போட்டு ஒரே ஒருத்தன் ஒரு இலட்சம் பணம் பெறுவது மிச்சம் ஒரு இலட்சம் லாட்டரி டிக்கெட் நடத்துற கம்பெனிக்கு போய்விடும்...
இப்போ முதல்பரிசை நான் வாங்கனுமென்றால் எல்லா லாட்டரியையும் நானே வாங்கனும், அப்படி வாங்கினால் நான் 2 இலட்சம் செலவு செய்யறேன், ஆனா பரிசு ஒரு இலட்சம்...

இந்த இடத்தில் கருணாநிதி வந்து எல்லோரும் வாங்குற லாட்டரி டிக்கெட்டுக்கு அரசாங்க பணத்தை எடுத்து நான் பணம் தர்றேன் அப்படிங்கறார்... ஒரு இலட்சம் முதல் பரிசு வாங்கறவனுக்கு போயிடும் மீதி ஒரு இலட்சம் லாட்டரி கம்பெனிக்கு அதாவது இன்சூரன்ஸ் கம்பெனிக்கு... இதுக்கு பதில் ஒரு இலட்சத்தை அவரே ஆஸ்பத்திரிகளுக்கு செலவு செய்யலாமே?

தவணைத்(பிரிமியம்) தொகையாக ஆண்டொன்றுக்கு 517 கோடி ரூபாயை தமிழக அரசே தனியார் காப்பீட்டு நிறுவனத்திற்கு வழங்குகிறது.

ஒரு ஆண்டுக்கு 517 கோடி 5 ஆண்டுகளில் 2550 கோடிகளுக்கும் மேல், இந்த செலவில் எத்தனை மாவட்ட தலைமை மருத்துவமைகளையும் PHC களையும் மேம்படுத்தலாம்... எல்லாமே குறுகிய நோக்கத்திற்காக செயல்படுத்தப்படுகிறது

12:59 AM  
Blogger குழலி / Kuzhali said...

குழலி / Kuzhali said...
ரவி மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்திய பதிவு... கிண்டல்களை எதிர்கொள்ளும் முறை என்பது நிச்சயம் நர்சிம் எதிர்கொண்டது போல அல்ல... நர்சிம்மின் அந்த புனைவு மிக கோழைத்தனமானது,

அந்த பேட்டி கிண்டல் பதிவை பார்த்தேன் , இந்த கிண்டல்களையும் விட அதிகமாகவும் மூர்க்கமாகவும் இதற்க்கு முன் இணையத்தில் முகமூடி, (இணைய)குசும்பன் (இப்போது எழுதும் குசும்பன் அல்ல) எழுதுவார்கள், மற்றவர்கள் சிரித்தாலும் அதில் தொடர்புடையவர்கள் படிக்கும் போது ரத்தத்தை கொதிக்க வைக்கும், ஆனால் அப்போதும் கூட தொடர்புடையவர்கள் முகமூடியையும் இனைய குசும்பனையும் திரும்ப கிண்டலடித்துவிட்டோ அல்லது கண்டித்து கடுமையாக எழுதிவிட்டோ போவார்களே தவிர யாரும் நர்சிமை போல கேவலமாக நடந்து கொண்டதில்லை...

அந்த பேட்டியை கிண்டலடித்து எழுதியதில் அடிநாதமாக பிரியாணி வாங்கி கொடுத்து பேட்டி எடுக்க வைத்துள்ளார்கள் என்ற கிண்டலே... அய்யா நர்சிம் இதற்க்கே இப்படி கொத்தித்தெழுந்தால் நீங்கள் ஒரு இலட்ச ரூபாய் செலவு செய்து தண்ணி பார்ட்டி வைத்ததாலும் பலருக்கும் பணத்தை தண்ணீராக செலவு செய்வதாலுமே உங்களின் மொக்கையை கூட சூப்பர் என்று ஜால்ரா தட்டுகிறார்கள் என்று பலரும் பேசுகிறார்களே அதுவாவது தெரியுமா? இதை வெளியில் சொன்னதற்காக "பூக்காரன்" என்ற புனைவு வந்தாலும் கவலைப்படப்போவதில்லை.

எனக்கு இன்னமும் ஆச்சரியமாக இருக்கிறது எந்த அளவு வக்கிரம் மனதில் இருந்தால் அது இப்படி வெளிப்படுமென்று. நல்லவனாக நடிப்பது என்பது நல்லவனாக இருப்பதை விட கடினமானது, ஏதேனும் ஒரு நொடியில் அது வெளியாகிவிடும்.

இந்த பிரபல பதிவர் என்பது எனக்கு செக்க காமெடியாக தோன்றுகின்றது, வலையுலகம் என்பது வெறும் 4000-5000 பேர் புழங்குகின்ற இடம், இதில் பிரபலம் என்பது மாலன் ஒரு முறை சொன்னது போல பனிப்பெய்து குடம் நிரம்பாது என்பதுவே அப்போது என்ன இப்படி சொல்கிறார் என வருத்தப்பட்டேன் ஆனால் நான் பிரபல பதிவர் பிரபல பதிவர் என்று சட்டையை கிழித்துகொள்ளும் அளவிற்க்கு முத்திப்போய் இருப்பதை பார்த்தால் தமிழ்நாடே எம் பின்னால என்கிற ரேஞ்ச் வசனங்கள் பேசும் சிம்பு, தனுஷ், பரத் போன்றவர்களே தேவலாம் போல...

Monday, May 31, 2010
குழலி / Kuzhali said...
போன பின்னூட்டத்தின் தொடர்ச்சியாக பதிவு எழுதுவது என்பது மட்டுமே நமது தொழில் அல்ல, தினசரி வேலை அழுத்தங்கள், பிரச்சினைகள், குடும்பம், பக்கத்துவீட்டுகாரன் பிரச்சினைகள் என்று எத்தனையோ அழுத்தங்களிலிருந்தும் பிரச்சினைகளிலிருந்தும் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகவோ அல்லது எழுத்தார்வத்தை தீர்த்துக்கொள்ளவோ, சமூக கோபத்தை காண்பிக்கவோ அல்லது ஏதோ ஒன்று தான் பதிவுலகில் எழுதவோ வாசிக்கவோ வைக்கின்றது, இங்கேயும் இப்படியான குரூரமான கிழிப்புகள் நீங்க ரணத்தை ஏற்படுத்தும், தினசரி வாழ்க்கையில் பதிவுலகம் தாக்கங்களை ஏற்படுத்தும்... நிச்சயம் அவர் இரண்டுநாளாவது தூங்கியிருக்கமாட்டார்..

7:17 PM  
Blogger குழலி / Kuzhali said...

http://tvpravi.blogspot.com/2010/05/blog-post_31.html

குழலி / Kuzhali said...
ரவி மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்திய பதிவு... கிண்டல்களை எதிர்கொள்ளும் முறை என்பது நிச்சயம் நர்சிம் எதிர்கொண்டது போல அல்ல... நர்சிம்மின் அந்த புனைவு மிக கோழைத்தனமானது,

அந்த பேட்டி கிண்டல் பதிவை பார்த்தேன் , இந்த கிண்டல்களையும் விட அதிகமாகவும் மூர்க்கமாகவும் இதற்க்கு முன் இணையத்தில் முகமூடி, (இணைய)குசும்பன் (இப்போது எழுதும் குசும்பன் அல்ல) எழுதுவார்கள், மற்றவர்கள் சிரித்தாலும் அதில் தொடர்புடையவர்கள் படிக்கும் போது ரத்தத்தை கொதிக்க வைக்கும், ஆனால் அப்போதும் கூட தொடர்புடையவர்கள் முகமூடியையும் இனைய குசும்பனையும் திரும்ப கிண்டலடித்துவிட்டோ அல்லது கண்டித்து கடுமையாக எழுதிவிட்டோ போவார்களே தவிர யாரும் நர்சிமை போல கேவலமாக நடந்து கொண்டதில்லை...

அந்த பேட்டியை கிண்டலடித்து எழுதியதில் அடிநாதமாக பிரியாணி வாங்கி கொடுத்து பேட்டி எடுக்க வைத்துள்ளார்கள் என்ற கிண்டலே... அய்யா நர்சிம் இதற்க்கே இப்படி கொத்தித்தெழுந்தால் நீங்கள் ஒரு இலட்ச ரூபாய் செலவு செய்து தண்ணி பார்ட்டி வைத்ததாலும் பலருக்கும் பணத்தை தண்ணீராக செலவு செய்வதாலுமே உங்களின் மொக்கையை கூட சூப்பர் என்று ஜால்ரா தட்டுகிறார்கள் என்று பலரும் பேசுகிறார்களே அதுவாவது தெரியுமா? இதை வெளியில் சொன்னதற்காக "பூக்காரன்" என்ற புனைவு வந்தாலும் கவலைப்படப்போவதில்லை.

எனக்கு இன்னமும் ஆச்சரியமாக இருக்கிறது எந்த அளவு வக்கிரம் மனதில் இருந்தால் அது இப்படி வெளிப்படுமென்று. நல்லவனாக நடிப்பது என்பது நல்லவனாக இருப்பதை விட கடினமானது, ஏதேனும் ஒரு நொடியில் அது வெளியாகிவிடும்.

இந்த பிரபல பதிவர் என்பது எனக்கு செக்க காமெடியாக தோன்றுகின்றது, வலையுலகம் என்பது வெறும் 4000-5000 பேர் புழங்குகின்ற இடம், இதில் பிரபலம் என்பது மாலன் ஒரு முறை சொன்னது போல பனிப்பெய்து குடம் நிரம்பாது என்பதுவே அப்போது என்ன இப்படி சொல்கிறார் என வருத்தப்பட்டேன் ஆனால் நான் பிரபல பதிவர் பிரபல பதிவர் என்று சட்டையை கிழித்துகொள்ளும் அளவிற்க்கு முத்திப்போய் இருப்பதை பார்த்தால் தமிழ்நாடே எம் பின்னால என்கிற ரேஞ்ச் வசனங்கள் பேசும் சிம்பு, தனுஷ், பரத் போன்றவர்களே தேவலாம் போல...

Monday, May 31, 2010
குழலி / Kuzhali said...
போன பின்னூட்டத்தின் தொடர்ச்சியாக பதிவு எழுதுவது என்பது மட்டுமே நமது தொழில் அல்ல, தினசரி வேலை அழுத்தங்கள், பிரச்சினைகள், குடும்பம், பக்கத்துவீட்டுகாரன் பிரச்சினைகள் என்று எத்தனையோ அழுத்தங்களிலிருந்தும் பிரச்சினைகளிலிருந்தும் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகவோ அல்லது எழுத்தார்வத்தை தீர்த்துக்கொள்ளவோ, சமூக கோபத்தை காண்பிக்கவோ அல்லது ஏதோ ஒன்று தான் பதிவுலகில் எழுதவோ வாசிக்கவோ வைக்கின்றது, இங்கேயும் இப்படியான குரூரமான கிழிப்புகள் நீங்க ரணத்தை ஏற்படுத்தும், தினசரி வாழ்க்கையில் பதிவுலகம் தாக்கங்களை ஏற்படுத்தும்... நிச்சயம் அவர் இரண்டுநாளாவது தூங்கியிருக்கமாட்டார்..

7:18 PM  
Blogger குழலி / Kuzhali said...

http://senshe-kathalan.blogspot.com/2010/06/blog-post.html

இது இன்னுமொரு மகா வக்கிரம், பெண்களுக்கு உதவி செய்தாலே வச்சிருக்கான் என்று பேசும் கழிசடைத்தனம் டாக்டர் புரூனேயிடமும்... டாக்டர் புருனேயின் இந்த முகத்தை எதிர்பார்க்கவில்லை... டாக்டர் புருனேயை வண்மையாக கண்டிக்கிறேன்

7:20 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://jothibharathi.blogspot.com/2010/06/blog-post_26.html

//உமிழ் நீர் கூட தமிழ் நீர்தான் என்கிற ஒவ்வாக் கவிதைகளே இதற்கு சாட்சி. வெளியேறும் கழிவுகளைக் கூட உருவகப்படுத்தத் தவறுவதில்லை இந்த ஓணாண்டி கவிஞர்கள்.
//
உமிழ்நீர் தமிழ்நீர் என்ன கொடுமைங்க நல்ல வேளைங்க இவரின் 'அந்த' நீர் தான் இங்கே தமிழுக்காக பாடுபடும் அனா,ஸ்னா,கனா என்று கவிதை பாடாமல் விட்டானுங்க இந்த கவிஞர்கள்

10:27 PM  
Blogger குழலி / Kuzhali said...

http://ujiladevi.blogspot.com/2010/10/2020.html#comment-form

சுவாமி உங்கள் பதிவுகளை தொடர்ந்து படித்துவருபவன், ஆண்மீகத்தில் நம்பிக்கையென்றெல்லாம் ஒன்றுமில்லை, சும்மா என்ன தான் உங்களை போன்ற ஆட்கள் படம் காட்டுகிறார்கள் என்பதற்க்காகவே படித்து வருகிறேன், பெரும்பாலும் படித்து சிறிய புன்முறுவலோடு சென்றுவிடுவேன், இன்றும் அப்படியே சென்றிருப்பேன் ஆனால் செக்சாலஜி மருத்துவர் ரேஞ்சுக்கு நீங்கள் பேசிக்கொண்டிருப்பது அதுவும் ஆண்மை குறைபாட்டிற்க்கு சுய இன்பம் ஒரு காரணமென்று சொல்வதன் ஆதாரமென்ன?

நடைமுறையில் பார்க்கும்போது சுய இன்ப பழக்க முடையவர்கள் விந்து சத்து குறைவு என்று எந்த ஆராய்ச்சி வைத்து கூறுகிறீர்கள் இதற்க்கு ஆதாரமென்ன? இன்றைய கட்டத்தில் விந்தணு வீரிய குறைபாடு உணவுப்பழக்கத்திலிருந்து அன்றாட வாழ்க்கை முறை ஸ்ட்ரெஸ் என ஏகப்பட்ட காரணங்களை கூறும்போது சுய இன்ப பழக்கம் என்பது அதில் வரவில்லை, சுய இன்பம் மேற்கொண்டால் விந்து வீரிய குறைவு மற்றும் நரம்புதளர்ச்சி ஏற்படும் என்பது தொடர்பாக ஏதேனும் ஆராய்ச்சி ஆதாரங்கள் உண்டா, சும்மா விந்து விட்டவன் நொந்து கெட்டாங்கற பழமொழி கிழமொழி ஆதாரங்கள் இல்லாமல்...

தமிழகத்திலே ஒரு கெட்டப்பழக்கம் நம்ம ரேஞ்சுக்கு ப்லாக், எழுத்தாளர் ஞானி ரேஞ்சுக்கு விகடனோ குமுதமோ கிடைத்தால் போதும் மருத்துவர் மாத்ருபூதம் ரேஞ்சுக்கு நமக்கு அதில் அறிவு இருக்கோ இல்லையோ தகுதி இருக்கோ இல்லையோ செக்ஸ் பற்றி மருத்துவ காரணங்களை எழுத ஆரம்பித்துவிடுவோம்... இதற்க்கு சுவாமிஜியும் விலக்கு அல்ல போல...

11:50 PM  
Blogger குழலி / Kuzhali said...

http://ujiladevi.blogspot.com/2010/12/blog-post_03.html#comment-form


ஸ்ரீருத்ரம் மற்றும் விஷ்ணு சகஸ்கரநாமம் ஒலியை கொடுத்தால் நடராசர் படமும் சங்கு சக்கர படமும் வருவதாக சொல்லியுள்ளீர்கள், இதற்கான ஆதாரம் ஏதேனும் இருக்கிறதா? என்ன சாஃப்ட்வேர் ஹார்ட்வேர் இதற்காக பயன்படுத்தியுள்ளார்கள்... இவைகள் எல்லாம் இல்லையென்றால் இப்படியானதை டுபாக்கூராக கருத வேண்டியிருக்கும், சமஸ்கிரதமே கம்ப்யூட்டர் மொழி என்று சிலர் விடும் டுபாக்கூர்களை போல இவைகளும் டுபாக்கூர்களே...

6:56 PM  
Blogger குழலி / Kuzhali said...

http://itzyasa.blogspot.com/2011/01/blog-post_13.html

இதுவும் ஒரு வழக்கமான டெம்ப்ளேட் வரதட்சனை கவிதை, ஆண் மகனின் பட்டங்களுக்கும் வேலைக்கும் ஏற்றமாதிரி அவர்களை விற்பதாகவும் வரதட்சனை கேட்பதாகவும் சொல்லப்பட்டாலும் வரதட்சனையே வாங்காமல் திருமணம் செய்ய எத்தனையோ ஆண் மகன்கள் தயாராகத்தான் இருக்கிறார்கள் ஏன் பிஇ படிச்சவனோ எம்பிஏ படிச்சவனோ நல்ல வேலை பார்ப்பவனோ மேனேஜராவோ தான் திருமணம் செய்ய வேண்டுமா? வரதட்சணை வேண்டாமென சொல்பவன் ஐடிஐ(IIT அல்ல ITI) படிச்சவனாகவோ சுமாரான வேலையில் இருப்பவனாகவோ இருந்தால் என்னவென்று திருமணம் செய்துக்கலாமே வரதட்சணை தராமல்...

பெண்கள் பணத்தையும் நகையையும் வரதட்சணையாக தருகிறார்கள் என்றால் ஆண்கள் படிப்பையும் வேலையையும் சம்பளத்தையும் வரதட்சணையாக தருகிறார்கள்...

வழமையான டெம்ப்ளேட் வரதட்சணை கவிதைகளை படித்து கடுப்பாகி கொலைவெறியில்

9:55 PM  
Blogger குழலி / Kuzhali said...

http://kalvetu.blogspot.com/2011/01/blog-post_15.html

சீமானின் தேவர் சாதி வெறி என்றெல்லாம் பதிவுகளை பார்த்தால் மிக்க மகிழ்ச்சியாக இருக்கு நம்ம நாடு முன்னேறியிருப்பதை பின்ன நம்ம ஊர்ல சாதிப்பாசம் சாதிவெறியெல்லாம் சாதிவிட்டு சாதியெல்லாம் வருது போல :-)

செபாஸ்டின் சீமான் தேவர் சமூகத்தை சேர்ந்தவரல்ல... அவர் நாடார் சமூகத்தை சேர்ந்தவர்... என்பது இங்கே தகவலுக்காக மட்டும் :-)

பின்குறிப்பு சீமானின் தேவர் சாதி வெறி பதிவுகளின் தலைப்புகளை மட்டுமே படித்தேன் :-)

5:24 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://kalvetu.blogspot.com/2011/01/blog-post_15.html

சீமானின் தேவர் சாதி வெறி என்றெல்லாம் பதிவுகளை பார்த்தால் மிக்க மகிழ்ச்சியாக இருக்கு நம்ம நாடு முன்னேறியிருப்பதை பின்ன நம்ம ஊர்ல சாதிப்பாசம் சாதிவெறியெல்லாம் சாதிவிட்டு சாதியெல்லாம் வருது போல :-)

செபாஸ்டின் சீமான் தேவர் சமூகத்தை சேர்ந்தவரல்ல... அவர் நாடார் சமூகத்தை சேர்ந்தவர்... என்பது இங்கே தகவலுக்காக மட்டும் :-)

பின்குறிப்பு சீமானின் தேவர் சாதி வெறி பதிவுகளின் தலைப்புகளை மட்டுமே படித்தேன் :-)

5:25 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://deviyar-illam.blogspot.com/2011/02/blog-post_13.html?showComment=1297655217064#c2474791709095941114
//இன்று நகரமயமாக்கல், புலம் பெயர்தல் என்ற இந்த இரண்டு காரணங்களால் சாதி மூலக்கூறுகளை எவரும் பொறுமையாக கண்டு கொள்ள வாய்ப்பும் இல்லை. அதற்கான வசதிகளும் மிகக் குறைவு. உனக்கு வேலை தெரியுமா? அனுபவம் இருக்கிறதா? என்று கேட்கும் இன்றைய பொருளாதார போட்டியுலகில் எவரும் நீ இந்த சாதியா? என்று கேட்பது குறைவு. இன்றைய சூழ்நிலையில் நம் அரசாங்கம் மட்டுமே இதை ஒரு ஆயுதமாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. அரசாங்கத்தை சார்ந்து வாழ வேண்டும் என்பவர்களுக்கு மட்டுமே இந்த பித்து தலைவரைக்கும் ஏறி இன்று வரைக்கும் பல வகையிலும் தடுமாற வைத்துக் கொண்டிருக்கிறது. அரசாங்கம் சாராத தனி நபர்களின் நிர்வாகத்தில் உள்ளவர்களின் பார்வையில் 70 சதவிகிதம் இன்று சாதி என்ற அமைப்பே தேவையில்லாமல் போய்விட்டது//

இந்தக்கூற்றை கடுமையாக எதிர்க்கிறேன், நகரத்தில் சாதி பார்க்கவில்லையென்றால் நகரங்களில் இருப்பவர்கள் இந்நேரம் சாதிமாறிய திருமணங்களும் நடந்தேறி நகரத்தில் சாதியே இல்லாமல் ஆகியிருக்க வேண்டும், ஆனால் நகரம் அப்படியில்லை என்பதே உண்மை, சென்னை நகரத்தில் ஏரியா ஏரியாவாக சாதிஆக்கிரமிப்பு உண்டு, நீண்ட காலமாக (திருவல்லிக்கேணி, அய்யோத்திகுப்பம் போன்ற மீனவர் பகுதிகள்)இருப்பவர்கள் போக ஒரே சாதிக்காரர்கள் ஒன்றாக குடியேறும் இடங்கள் உண்டு... ஒருவர் ஒரு இடத்தின் உள்ளே போக அதைத்தொடர்ந்து சொந்தக்காரர்கள் உள்ளே போக அதன் பின் நம்ம சாதிக்காரங்க அங்கே அதிகம் என்று பிறரும் உள்ளே போக ஏ அங்க அந்த சாதிக்காரனுங்க மெஜாரிட்ட நம்ம அங்கே போகவேண்டாமென மற்ற சாதி நினைக்க அங்கே ஒரு சாதி கிளஸ்டர்(தொகுதி) உருவாகின்றது... அதன் தொடர்ச்சியாக சாதி சங்கம் அதற்கொரு கட்டிடம் என பரவலாகின்றது... பெரு நகரங்களிலேயே இம்மாதிரி என்றால் சிறுநகரங்கள் சொல்லவே வேண்டாம்...

டூ-லெட் சைவம் மட்டும் என்பது போன்ற வெளிப்படையாக மட்டும் அல்லாமல் மறைமுகமாகவும் சாதி நகரத்தில் ஆண்டுகொண்டு தான் இருக்கின்றது...

சாதி என்பது சாதிக்க முடியாத இடத்தில் மட்டுமே சாதி பார்க்கப்படவில்லை, ஒரு குறிப்பிட்ட வேலையை செய்து முடிக்க சாதி பார்த்தால் செய்ய முடியாது என்ற சூழலில் மட்டுமே சாதி பார்க்கப்படாமல் இருக்கிறது, சாதி பார்த்தாலும் ஒரு வேலையை செய்ய முடியுமென்றால் அங்கே சாதி மட்டுமே பார்க்கப்படும் என்கிற நிலைதான் இதுவரை....

மிக எளிய உதாரணம் சரவணபவன் அண்ணாச்சி கொலைக்கேசில் விழுந்த போது பல்வேறு சாதிகளை சேர்ந்த ஓட்டல் முதலாளிகள் ஒன்றிணைந்து சரவணபவன் வியாபாரத்தை ஒழிக்க முயற்சித்தனர் இது பொருளாதார மற்றும் பிசினஸ் அடிப்படை ஆனால் நாடார் சமூகத்தை சேர்ந்த பிற தொழிலதிபர்கள் ஒன்று சேர்ந்து அதை முறியடித்தனர்... பிற பிசினஸ்மேனுக்கு பிசினஸ் ஆக தரும் ஒத்துழைப்பை தாண்டி பெரும் ஒத்துழைப்பை சரவணபவனுக்கு நல்கி அந்த சரவணபவன் பிசினசை காப்பாற்றினார்கள் இது எதனால்??

நேரம் கிடைக்கும்போது விரிவாக பேசலாம்...

7:47 PM  
Blogger குழலி / Kuzhali said...

http://vinthaimanithan.blogspot.com/2011/03/blog-post_16.html?showComment=1300251127016#c5149975450083063579

எப்படிங்க காங்கிரசை மட்டும் வீழ்த்தினால் போதுமா? அல்லது காங்கிரசை அபிமன்யூவை வீழ்த்தும்போது அதன் தேர் சக்கர அச்சாக இருந்த திமுகவும் சேர்த்து வீழ்த்தப்படனுமா? அல்லது எல்லாம் முடிந்தும் இன்னமும் சுயமரியாதையின்றி செருப்படி வாங்கிக்கொண்டே முதுகில் சுமக்கும் திமுகவைப்பற்றி எதுவுமே இந்த பதிவில் காணாமே... காங்கிரஸ் திமுக என்னும் தேர் சக்கர அச்சோடு பாமக என்னும் மணியை ஆட்டிக்கொண்டே போர் பரணி பாடுச்சே அந்த பாமகவை பற்றியும் இதில் காணாமே... ஒரு வேளை அக்மார்க் தி.க. காரங்கள் மாதிரி உங்களுக்கும் கோபமும் ருத்ரமும் செலக்டிவா தான் வருமோ?

9:52 PM  
Blogger குழலி / Kuzhali said...

http://www.jackiesekar.com/2011/04/2011_2656.html#comment-form

//தமிழக அரசியலில் கை பட்டா குத்தம் கால் பட்டா குத்தம் என்று எல்லோராலும் போட்டு வார்த்தைகளால் தாக்கபடுபவர் முதுபெரும் தமிழக அரசியல் தலைவர் கலைஞர் கருணாநிதிதான்//
அப்படியெல்லாம் ஒரு வெண்ணையும் கிடையாது 2008 மே மாதத்திற்க்கு முன் வலையுலகம் முழுவதும் கருணாநிதி திராவிட ஆதரவுதான் இந்த கிழநரியின் இனத்துரோகம் உணரப்பட்ட பின்பே உண்மையான ரோசமுள்ள தமிழின ஆதரவாளர்கள் பலரும் கடும் எதிர்ப்பாளர்கள் ஆனார்கள்...

12:14 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://theepandham.blogspot.com/2011/04/blog-post_4045.html?showComment=1303443941364#c2130243041925109866

வணக்கம்,
சீமான் மோடியை புகழ்ந்து பேசுவதாக தொடர்ச்சியாக சொல்லப்பட்டு வருகின்றது... எந்த பேச்சையும் context ஐயும் முன்னாலும் பின்னாலும் வெட்டிவிட்டால் எப்படி வேண்டுமானாலும் திரிக்க இயலும்... காந்தி கொலை செய்ய சொன்னார் என்று அவர் பேச்சிலிருந்தே ஆதாரம் காட்ட இயலும் சீமானுக்கு எதிராக திட்டமிட்டு பரப்பப்படும் இம்மாதிரியான திரிப்புகளுக்கு பலியாகாதீர்கள்...

சீமானின் மோடி பற்றிய பேச்சை இந்த சுட்டியில் கேட்கலாம்

http://www.youtube.com/watch?v=WxI7DGnIxw4&playnext=1&list=PL95B11E8857AEC03A

இது தொடர்பாக எழுதப்பட்ட பஸ் விவாதம் இங்கே https://profiles.google.com/blogsking/posts/cgxWNc2EYc1

வழக்கம்போல உனா பினாக்கள் ஒன்லைனரை திருத்தி திருகுத்தாளம் போடும் வேலையை செய்துள்ளார்கள்...

கருணாநிதி காங்கிரசோடு ஏன் கூட்டுவைத்தாய் என்பதற்க்கு கருணாநிதி மத்தியில் ஆளும் காங்கிரசோடு கூட்டணி வைத்தால் தான் நம் மாநிலத்துக்கு நல்லது செய்ய முடியும் என்ற சொல்வது தவறு, போரை நிறுத்தமுடிந்ததா? படுகொலைகளை நிறுத்தமுடிந்ததா? ஆனால் எதிர் எதிர் அரசியல் செய்து கேரளாவிலே கம்யூனிஸ்ட்கள் செயல்படவில்லையா எதிர் எதிர் அரசியல் செய்யும் மோடி குஜராத்தில் இலவசமில்லையே இலட்சம் கோடி கடன் அடைத்துள்ளார்களே இந்தியாவின் முதல்மாநிலமாக வந்துள்ளதே அவரென்ன காங்கிரஸ் கட்சிக்கு தாலாட்டிக்கிட்டா இருக்கார் என்று கூறியுள்ளார்....

பாகம் 2 ல் 6ம் நிமிடத்திலிருந்து 7ம் நிமிடத்தை பார்க்கவும்
----------------
இன்றைக்கு சீமானால் அதிகம் பாதிக்கப்படுவது திமுக... திமுகவின் மற்றும் கருணாநிதியின் போலி தமிழுணர்வு சீமானால் அம்மணமாக்கப்படுவதால் எதையாவது செய்து சீமான் மீது கோபத்தை உருவாக்க வேண்டுமென இம்மாதிரியான திருட்டுத்தனங்கள் செய்யப்படுகின்றன... மோடியைமட்டுமல்ல கேரள கம்யூனிஸ்ட்களையும் உதாரணம் காட்டியுள்ளார்...

8:46 PM  
Blogger குழலி / Kuzhali said...

http://theepandham.blogspot.com/2011/04/blog-post_4045.html?showComment=1303444224378#c6854864070985073790

//சீமான் தன் ஜாதியில் தீவிர வெறி கொண்ட உறுப்பினராக இருக்கிறான். அண்மையில் இவன் ஜாதியைச் சேர்ந்தவர்கள், ஜாதிக் கூட்டம் நடத்தினார்கள். அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட சீமானும், கருணாஸ் போன்ற வெறியர்களும் இதர சாதியினரைத் தாக்கிப் பேசியுள்ளனர்.
//
சீமான் என்ன சாதி தெரியுமா? சீமான் முக்குலத்தோர் சாதியில் பிறந்தவர் அல்ல... கருணாஸ் தான் முக்குலத்தோர் ... சீமான் எந்த சாதியென்றே தெரியாமல் சீமானை தேவர் சாதிவெறியராக காட்ட முயல்கிறார்கள் இதையெல்லாம் முறியடித்து சீமான் வெளிவருவார்...

8:50 PM  
Blogger குழலி / Kuzhali said...

http://anbanavargal.blogspot.sg/2013/02/blog-post_17.html

//காரைக்கால் பகுதியை சேர்ந்த சில முகநூல் செயல்பாட்டாளர்கள், இன்னும் சிலர் தங்களது பக்கங்களில், விநோதினியை படிக்க வைத்தது, அந்த குடும்பத்துக்கு தேவையானதை செய்து தந்தது எல்லாம் சுரேஷ். சுரேஷ்க்கு விநோதினியை திருமணம் செய்து வைப்பதாக அந்தப்பெண்ணின் தந்தை பலமுறை உறுதி தந்துள்ளார். அந்தப்பெண்ணும் உணர்ந்து அவனுடன் பழகியுள்ளார். படித்து முடித்ததும் அந்த பெண் தனக்கு கை நிறைய சம்பளம் தரும் வேலை கிடைத்ததும் சுரேஷ்சை கை கழுவியுள்ளாள் என எழுதியுள்ளார்கள்.//
This is wrong news, show the proof who is that Facebook people, I saw few post all are copy paste posts and started by some anonymous, did you enquire about this? I enquired.

இதை இப்படி நீங்கள் எழுதி இந்த தவறான தகவலை பரப்புவதே தவறானது, வினோதினியின் தந்தைக்கு கடன் கொடுத்தவன் என்பது மட்டுமே உண்மை, இதற்காக எல்லாம் நீங்கள் வினோதினியை பற்றி தவறாக பேசுவதென்றால் உங்கள் அப்பனுக்கு கடன் கொடுத்தவனோடெல்லாம் உன் அம்மாவுக்கோ உன் தங்கைக்கோ தொடர்பு இருக்கு என்று செய்தி போட்டால் அதை பரப்புவாயாடா பொறம்போக்கு நாயே... மரியாதையாக இந்த பதிவை எடு, இல்லையென்றால் உன் அம்மாவை பற்றி நான் எழுதறேன் அந்த போஸ்ட்டுக்கும் இப்படி பரப்பி எழுதுவியாடா நாயே....

10:34 PM  

Post a Comment

<< Home