Sunday, December 17, 2006

டிசம்பர் 18

டிசம்பர் 18 க்கு பிறகான பின்னூட்டங்கள்

56 Comments:

Blogger குழலி / Kuzhali said...

http://mkarthik.blogspot.com/2006/12/2006.html

"சிங்கம் சீக்குல படுக்கும் போது சிங்கிளா சுண்டெலி சுவீட் ட்ரீம்ஸ் சொல்லுமாம்...." அது மாதிரி அசினின் அகில உலக ரசிகர் மன்றத்தின் ஒரே தலைவனான நான் கொஞ்சம் அசந்த நேரம் பார்த்து அசின் ஜொள்ளு மன்றத்தின் மொத்த உருவமாக உங்களை காண்பிக்க நினைப்பதற்கு என் கண்டனங்கள்....

தானைத்தலைவி, வருங்கால முதல்வர், தேசிய முற்போக்கு ஜனநாயக புரட்சித்தலைவி அழகுக்கிளி அசின் பற்றி நான் ஜொள்ளிய பதிவுகளின் இணைப்பு கீழே....

இணையத்தில் அழகுக் கிளி அசின்

கனடா கொண்டார் பட்டம் - அசின்

கமல் என் கனவு நாயகன் - அசின் மன்றம் கலைப்பா?!

உள்ளம் கேட்குமே

இனிமேல் மன்றத்திடம் அனுமதிபெறாமல் அசின் பற்றி கனவு கண்டால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்....



ஆமாம்... அசின் ஜொள்ளு காலம் முடிஞ்சி நயன்தாரா ஜொள்ளு காலமும் முடிந்து அடுத்து யாருடானு தேடுற நேரத்தில இன்னும் அசின்னுன்னே இருக்கியே இன்னாபா மேட்டரு?

8:42 PM  
Blogger குழலி / Kuzhali said...

http://potteakadai.blogspot.com/2006/12/blog-post_20.html

http://chella.info/webgypsy/archives/217

செல்லா உங்களின் அறச்சீற்றம் கண்டிப்பாக தேவையானது, சாந்திக்கு இதனால் ஏற்படும் உளவியல் பிரச்சினைகளை எப்படி எதிர்கொள்ளப்போகிறார் என்ற அச்சம் கடுமையாக வாட்டுகிறது, அதையெல்லாம் எதிர்கொண்டு சாதிக்க வேண்டும் அவர், ஆனால் இந்த பத்திரிக்கைகள் இதற்கு செய்யும் வினையை பார்க்கும் போது இதில் வேறு ஏதோ ஒரு அரிப்பு அவர்களுக்கு இருக்கிறது போலத் தோன்றுகின்றது.... மேலும் இவர் இதற்கு முன் பல சர்வதேச போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார் அப்போது இதே சோதனைகளை வெற்றிகரமாக கடந்துள்ளாரே.... ஏன் மறு சோதனைக்கு கேட்கக்கூடாது? இதைப்பற்றி ஏனிந்த பத்திரிக்கைகள் முக்கிய இடம் கொடுக்கப்படவில்லை? இதையெல்லாம் பார்க்கும் போது நிச்சயம் இந்த பத்திரிக்கைகளுக்கு வேறு அரிப்பு இருப்பது நிச்சயம் தெரிகின்றது.

4:08 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://karuppupaiyan.blogspot.com/2006/12/blog-post_21.html

செம நக்கலுப்பா உனக்கு....அரவிந்தன் நீலகண்டனே பாவம், தமிழகம் இந்து விரோத சக்திகளின் இருப்பிடம், பாக்கிஸ்தானாகிறது பங்களாதேசாகிறது தமிழகம்னு, இதுல பேப்பர் கட்டிங்கெல்லாம் எடுத்துப்போடுறார்... நல்லாத்தான்யா கெளப்புறாங்க பீதியை....

முன்பு போலில்லாமல் இது மாதிரியான உங்கள் எழுத்துகள் தனி மனித தாக்குதல் அய்யோ அம்மா என்று கூச்சல்களின் பின் ஒளிபவர்களுக்கு இடம் கொடாமல் இருக்கின்றது, தொடருங்கள்

நன்றி

5:23 PM  
Blogger குழலி / Kuzhali said...

http://paarima.blogspot.com/2006/12/blog-post_23.html

இதைப்பற்றி லபக்குதாசுவும் ராமதாஸ் வாத்தியார் என்று ஒரு பதிவு போட்டிருந்தார், ஏதேனும் மருத்துவரை திட்டிப்போட்டிருந்தார் என்றால் குவிந்திருப்பார்கள் ஆனால் என்ன செய்ய ஒரு பின்னூட்டம் கூட இல்லை... அப்புறம் நீங்கள் வன்னியர் என்பதால் தான் இந்த பதிவை போட்டீர்கள் என்பார்கள், எதற்கும் விகடனின் சாதிச்சான்றிதழும் லபக்கு தாசின் சாதிச்சான்றிதழையும் சரிபார்த்துக்கொள்ளவும்

6:24 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://masivakumar.blogspot.com/2006/12/blog-post_23.html

சிவக்குமார் நல்ல பதிவு....

//ஆதிக்க சாதியினர் வகுத்த சாதி முறைக்குள்ளேயே அதன் பெயரைச் சொல்லிக் கொண்டே ஒடுக்கப்பட்ட சாதியினர் தமது நிலையை மேம்படுத்திக் கொள்ள முடியும் என்பது ஒரு அளவுக்குத்தான் சாத்தியம். எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையிலும் குறிப்பிட்ட பங்கு விதிகளை வகுத்த வகுப்பினருக்குப் போய்ச் சேரும் வண்ணம் ஆட்டம் நடந்து கொண்டிருக்கும் போது, எவ்வளவுக்கெவ்வளவு அடித்து ஆடுகிறீர்களோ, அவ்வளவுக்களவு நீங்கள் எதிர்க்க நினைக்கும் ஆதிக்க சாதியினர் வளர்ந்து வருவார்கள்.
//
இது நிச்சயமான உண்மை தான், ஆனால் எதன் பெயரால் உரிமைகள் மறுக்கப்படுகின்றதோ, எதன் பெயரால் கல்வி மறுக்கப்படுகின்றதோ அதன் பெயரால் தானே ஒன்றினைந்து போராட முடியும்? நீங்களே கூறியுள்ளீர் ஆதிக்க சாதியினர் வகுத்த சாதி முறைக்குள்ளேயே அதன் பெயரைச் சொல்லிக் கொண்டே ஒடுக்கப்பட்ட சாதியினர் தமது நிலையை மேம்படுத்திக் கொள்ள முடியும் என்பது ஒரு அளவுக்குத்தான் சாத்தியம். என்று முதலில் அந்த ஓரளவிற்கு முன்னேற்றம் அடையட்டும், முன்பொருமுறை சந்தோஷ் பதிவில் ஒரு பின்னூட்டத்தில் கூறியிருந்தேன்....
//எந்த ஊருடா நீ, செம்மங்குப்பம், ஓ செம்மங்குப்பத்தானா நீ, பள்ளிப்பசங்க(அருந்ததியரை சக்கிலி என்று தாழ்வாக சொல்வார்களே அது மாதிரி வன்னியர்களை பள்ளி என்று என்று தாழ்வாக சொல்வது வழக்கம் ) நீங்கலாம் படிச்சி என்னடா செய்யப்போறிங்க உங்களுக்கெதுக்குடா படிப்பு, சாரயம் காச்சபோறியா படிச்சிட்டு என்று கேட்ட பள்ளிக்கூட வாத்தியாரிலிருந்து//
இப்படி கேட்ட வாத்தியாரிடம் அய்யா தமிழனாகிய நான் ஏன் படிக்க கூடாது என்றோ? அய்யா இந்தியனாகிய நான் ஏன் படிக்கக்கூடாது என்றோ அய்யா மனிதனாகிய நான் ஏன் படிக்கக்கூடாது என்றா கேட்க முடியும், அப்படி கேட்டால் நான் எங்கே தமிழனை படிக்க கூடாது என்று சொன்னேன், பள்ளிப்பசங்க படிச்சி என்ன ஆகப்போகிறதுன்னு தானே கேட்கிறேன் என்பார்? நான் எங்கே இந்தியனை படிக்க கூடாது என்று சொன்னேன், பள்ளிப்பசங்க படிச்சி என்ன ஆகப்போகிறதுன்னு தானே கேட்கிறேன் என்பார்?

எதன் பெயரால் உரிமைகள் மறுக்கப்படுகின்றதோ அதன் பெயரால் தான் மறுக்கப்பட்டவர்கள் ஒன்றினைந்து உரிமைக்காக போராட முடியும், சாதியின் பெயரால் மறுக்கப்படும் போது வேறெவற்றின் பெயரால் இணைய முடியும்,

இங்கே அடிப்படை பிரச்சினை அதுவல்ல... இந்த கட்டமைப்பு மிகவும் அசாதாரணமானது, அப்படி இப்படி இணைந்து அடித்து போராடி சாதிய அடுக்கில் மேலே வந்துவிட்டால் மேலே வந்தவர்களுக்கு இந்த சாதிய அடுக்கு கலையாமல் இருக்க வேண்டுமென்று எண்ணுகிறார்கள்.... ஹரிகரன் புகழும் நாடார் சமூகத்தினர் 40 ஆண்டுகால உழைப்பில் முன்னேறும்போது அதற்கு கடுமையான தடை ஏற்படுத்தியவர்கள் யாரென்று புரியாமல் பேசிக்கொண்டிருக்கின்றார்!!! "பறையனை தொட்டால் தீட்டு சாணானை(நாடார்)பார்த்தால் தீட்டு" என்று சொல்வார்கள் முன்பு அந்த இழிவை நீக்கி முன்னேறிய இதே சமூகம் இன்று தலித்களோடு எப்படி உள்ளது என்பது தூத்துக்குடிகாரர்களிடம் கேட்டால் தெரியும்...

வரலாற்றிலேயே வலங்கை போர்கள் பற்றி படிக்கும்போது நிறைய விசயங்கள் புரியலாம், போராட்டத்தில் வெற்றி பெற்று மேலேரும் சாதி அதே சாதி அடுக்குமுறையை கட்டிக்காக்கின்றது, அதே சாதிய ஒடுக்குமுறையை பிறர் மேல் பிரயோகிக்கின்றது

படிப்புதான் சாதியை போக்குகின்றது, காதல் திருமணம் சாதியை ஒழிக்கின்றது என்பதெல்லாம் சும்மா பம்மாத்து... காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் பெரும்பாலும் ஆணின் சாதியிலோ பெண்ணின் சாதியிலோ ஐக்கியமாகிவிடுகின்றனர், படிப்பு சாதியை ஒழிக்கிறதா என்பதை சற்று யோசித்து பார்த்தால் புரியும்.

எல்லோரும் எல்லாமும் பெறும் போது சாதி தானாக ஒழியும் என்பது உண்மை ஆனால் எப்படி எல்லோரும் எல்லாமும் பெறமுடியும் என்று சொல்லுங்கள்...

9:10 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://dharumi.blogspot.com/2006/12/194-lets-hit-nail.html

பதிவிட்டவுடன் இந்த பதிவை படித்துவிட்டாலும் பின்னூட்டமிடாமல் காத்திருந்தது மற்றவர்களின் பின்னூட்டங்களுக்காகத்தான், என் எதிர்பார்ப்புகளை ஏமாற்றவில்லை, எப்படி சில பின்னூட்டங்கள் வரும் நான் எதிர்பார்த்தேனோ அப்படியேவந்திருக்கின்றன சில பின்னூட்டங்கள்.

சாதிக்கொடுமைகளுக்கு ஒரு குறிப்பிட்ட சாதிதான் காரணமென்பதில்லை, மற்ற சாதிகளும் தான் காரணம், குறிப்பாக இன்று தலித்களுக்கான உடனடி பிரச்சினைகள் பிற்படுத்தப்பட்டவர்களால் தான் என்பது உண்மை, இந்த பிற்படுத்தப்பட்டவர்கள் எல்லாம் வர்ணாசிரமத்தை காக்கும் காவல்நாய்கள், காவல்நாய்களுக்கு எலும்புத்துண்டு தான் கிடைக்கும், முழுப்பலனை அனுபவிப்பது இந்த காவல்நாய்கள் இல்லை, இவர்களெல்லாம் எண்ணிக்கையில் நிறைய இருந்தாலும் சாதி மரத்தை தாங்கிபிடிக்கும் இவர்களெல்லாம் சல்லிவேர்களே, ஆனால் ஆணி வேர் யாரென்பது மனசாட்சி உள்ள எல்லோருக்கும் தெரியும்.

முதலில் தவறுகளை ஒத்துக்கொள்ளும் தைரியம் வேண்டும், அதற்கு குறைந்த பட்ச நேர்மை வேண்டும், முதலில் தவறுகளை ஒத்துக்கொண்டு பின்பு அதற்கு என்ன காரணமோ வேறு எதுவோ வேண்டுமென்றாலும் சொல்லிக்கொள்ளலாம். மேற்கண்ட பின்னூட்டங்களில் எதில் அந்த குறைந்த பட்ச நேர்மை உள்ளது என்று எழுதியவர்களுக்கே தெரியும்.

சாதி தவறில்லை, சனாதான தர்மம் வாழ்க்கை நெறி அது வெறும் 200 வருடங்களில் தான் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு சிலரின் சுயநலத்திற்காக மாற்றப்பட்டுவிட்டது என்று தவறென்பதை ஒத்துக்கொள்ளும் குறைந்த பட்ச நேர்மையின்றி சாதி முறைக்கு வக்காலத்து வாங்குபவர்களுக்கு எத்தனை நேர்மை இருக்கின்றது.

//
நமது மீடியாக்களிலும் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகள் நடக்கும்போது வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டவர்களைப் பற்றிய விவரங்கள் வெளியே தெரியாதபடி 'பாதுகாத்து' விடுகிறார்கள். நம் சமூகத்தின் உண்மை முகங்கள் நமக்கே தெரியாமல் போய்விடுகின்றன.
//
இது பிற்படுத்தப்ப்பட்டவர்கள் அல்லது குறிப்பிட்ட சாதி என்பதற்காக அல்ல, இன்றைக்கும் யார் சாதிக்கொடுமை செய்தாலும் எந்த சாதி செய்தாலும் உயர் இல்லை இல்லை உச்ச சாதி ஊடகங்கள் அந்த சாதிக்கொடுமையை செய்தது பிற்படுத்தப்பட்ட சாதியாக இருந்தாலும் அந்த சாதியின் பெயரை சொல்வதில்லை, அதற்கு இந்த சாதியை கண்டு பயமென்றெல்லாம் இல்லை, முக்கிய காரணம் வர்ணாசிரமத்தை பாதுக்காக்கத்தான், அந்த கொடுமையை உச்சசாதியார் செய்யவில்லையென்றாலும் மற்றவர்கள் வர்ணாசிரமத்தின் பெயரால் செய்வதால் அதாவது தாம் நம்பும் கொள்கையை பிறர் பின்பற்றுவதால் அந்த வர்ணாசிரமத்தை காக்கத்தான் அந்த சாதிப்பெயர்கள் வெளியிடப்படுவதில்லை, தினமலருக்கோ, விகடனுக்கோ, குமதத்திற்கோ பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி பிரச்சினையிக்கு காரணமான கள்ளர் சாதிப்பெயரை ஏன் சொல்லவில்லை, ஏன் சாதிப்பிரச்சினையில் தேவர்,கவுண்டர் வன்னியர் என எந்தப்பெயரையும் சொல்லவில்லை, எது அவர்களை தடுத்தது? ஏனென்றால் வர்ணாசிரம காவல்நாய்களையும் வர்ணாசிரமத்தையும் எதிர்க்க துணிவில்லை உச்ச சாதி ஊடகங்களுக்கு, ஆனால் இங்கேயும் முதன்முதலில் சிறுபத்திரிக்கைகள் தவிர்த்து பாப்பாப்பட்டி கீரிப்பட்டி பிரச்சினையில் கள்ளர் சாதியினரின் பெயரை நக்கீரன் தான் எழுதியது.

கீற்று வில் தமிழருவி மணியன் அவர்கள் எழுதியது கீழே....

பார்ப்பனர் இன்றைக்கு தானாக வந்து உங்கள் முன்னாலே நிற்க மாட்டான். இந்த தமிழ்நாட்டில் எங்காவது சாதிக்கலவரம் நடந்தால், ஒரு பார்ப்பனனுக்கும், பார்ப்பன அல்லாதவர்க்கும் சண்டை நடந்து இரத்தம் வழிந்ததாக தகவலே கிடையாது. பார்ப்பனரல்லாதவர்க்குள்ளே பார்ப்பான் இருக்கிறான் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்.
காரணம் இது படிநிலைச் சமுதாயம். இந்த சமுதாயம் வர்ணாஸ்ரமத்தில் ஊறிக் கிடக்கிற அமைப்பு படிநிலைச் சமுதாயம். படிப்படியாக இருக்கிறது.

எல்லோருக்கும் மேலே பார்ப்பான் உட்கார்ந்து கொண்டு அவன் காலாலே தோளை அழுத்துகிறான். என் தோளின் மீது உன் காலா என்று கேட்க மறுக்கிறான். ஏன் என்றால் நான்கு பேர் தோளின் மீது இவன் நின்று கொண்டு இருக்கிறான். எனவே ஒரு காலை தான் சுமப்பதன் மூலம் நான்கு பேரின்தோள் மீது நான் நிற்கிறேனே என்ற சுகம் அவனுக்கு இருக்கிறது. இப்படித்தான் அவன் அவன் ஒவ்வொருவருக்கும் கீழே அடுத்தவனின் தோளை அழுத்துவதில் சுகம் இருப்பதினால் மேலே அழுத்திக் கொண்டிருப்பவனைப் பற்றிக் கவலைப்படவில்லை. அதனால் சொல்லுகிறேன், பார்ப்பனீயம் என்பது மிக மோசமானது. ‘சான்ஸக்ரிட்டேசன்’ என்று ஆங்கிலத்திலே சொல்லுவார்கள்.

சமஸ்கிருத மயமாக்கல், சமஸ்கிருத மயமாக்கல் என்பது உயர்சாதி ஆக்கல் என்று இருக்கிறது. இன்றைக்கு நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள், தலித் அவன் மிக முயன்று அய்.ஏ.எஸ். ஆகி விடுகிறான். அய்.ஏ.எஸ். ஆகிவிட்ட ஒரு தலித், நான் தலித் என்று சொல்லுகிறானா என்றால் இல்லை. அவன் உடனடியாக ஒரு பார்ப்பனனாக மாறி விடுகிறான் மனதளவில். அவன் அந்த பட்டி தொட்டியிலே இருக்கக் கூடிய மாடு மேய்க்கிற, சுள்ளி பொறுக்கிற சோற்றுக்கு இல்லாமல் அலைகிற இவன் தான் என் இனம். அவன் தான் நான் என்று சொல்லுகிற உள்ளம் வர மறுக்கிறது. இதை எல்லாம் சிந்திக்க வேண்டும். ஒரு பெரிய கருத்துப் புரட்சி நடக்கிறது என்றால், சமூகத்தை ஒட்டு மொத்தமாகப் புரட்டிப் பார்க்க வேண்டும். காலத்திற்கேற்றாற் போல் மாற்றங்கள் வருகின்றன


வர்ணாசிரமம் இத்தனை காலமும் உயிரோடு வலுவாக இருப்பதற்கு காரணம் அதன் அடுக்குமுறை தான், இரண்டு நிலைகள் மட்டும் இருந்திருந்தால் பிரெஞ்சுபுரட்சி, ரஷ்யப்புரட்சி மாதிரி ஓரிரு புரட்சிகளில் வெற்றி பெற்றிருக்கும், ஆனால் இந்த வர்ணாசிரம அடுக்குமுறை இவன் எல்லோருக்கும் கீழே, இவனுக்கு மேலே இவன், அவனுக்கு மேலே இன்னொருவன், அந்த இனொருவனுக்கு மேல் நான் என்னும் போது கடைசியில் இருப்பவன் உடனடியாக தன் மேல் இருப்பவனோடு சண்டை போடுவார்கள், இந்த இருவர்களின் சண்டையில் எல்லாவற்றையும் அனுபவித்துக்கொண்டு அய்யோ பாருங்கள் எங்களுக்கும் இதற்கும் என்ன தொடர்பு பாருங்கள் அவர்கள் தானே அடித்துக்கொள்கிறார்கள், அதற்கு நாங்கள் என்ன செய்வோம் என்பார்கள் (மேலே உள்ள சில பின்னூட்டங்கள் இதை உறுதிபடுத்துகின்றன).

கோயில் கருவரையில் போக முடியவில்லையே என்று நினைக்காமல் தலித்துக்கு கோயிலுக்குள்ள வரவே அனுமதியில்லை, அப்போ நமக்கு கருவரைக்கு வர அனுமதியில்லாதது சரிதான் என்று நினைக்கின்றான், அப்படி நினைக்கும்போது கோவிலுக்குள் நுழைய முனையும் தலித்தை, கருவரைக்குள் நுழைய அனுமதியில்லாத பிற்படுத்தப்பட்டவன் எதிர்க்கின்றான், பிற்படுத்தப்பட்டவர்கள் வர்ணாசிரமத்தின் காவல்நாய்களாக இல்லாமல் முதலில் மேலிருப்பவனிடம் தன் உரிமையை கேட்கவேண்டும், எப்படி மேலுள்ளவனிடம் தன் உரிமையை கேட்பதில் நியாயம் உள்ளது என நினைக்க வேண்டும், அதே நியாயம் தலித்களுக்கும் உண்டு என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

பிற்படுத்தப்பட்ட சாதிகள் வர்ணாசிரம காவல்நாய் வேலை செய்து என்ன பெரிதாக வாழ்க்கை முறையில் முன்னேறிவிட்டார்கள்? குடி, படிப்பு இல்லாமை, விழிப்புணர்ச்சி இல்லாமை, மத சமூக உரிமைகள் எதுவுமில்லாமல் தானே இருக்கின்றார்கள், இதெல்லாம் யாருக்கிருக்கின்றது? இந்த வர்ணாசிரமத்தினால் தலித்கள் நில உடமை / பண்ணையாரிடம் கூலி வாங்கும்போது வீட்டிற்கு வெளியே தெருவாசலில் நின்று வாங்குவார்கள், படையாச்சிகள் கேட்டிற்குள்ளே வீட்டின் தலைவாசலுக்கு வெளியே நின்று வாங்குவார்கள், "ஏய் படையாச்சிக்கு முதல்ல குடுத்தனுப்புங்கப்பா" என்று சொல்வார்கள், இந்த ஒன்றுக்குமுதவாத வெட்டி கவுரம் தான் அவர்களுக்கு போடப்படும் எலும்புத்துண்டு, மற்றபடி என்ன பெரிய வித்தியாசம் இவர்களின் வாழ்க்கையில் இருக்கின்றது? இந்த வெட்டி கவுரவத்தினால் படிப்பு, சுகமான வேலைகளையெல்லாம் பெற்றுள்ளார்களா? இல்லையே! ஆனால் இதெல்லாம் அனுபவிப்பவர்கள் யாரென்று தெரியாதா நமக்கெல்லாம், ஆனாலும் இந்த வெட்டி கவுரவ எலும்புத்துண்டுக்காக தலித்களின் வாழ்க்கையை கொடுமை நிறைந்ததாக மாற்றுவதும் இந்த பிற்படுத்தப்பட்டவர்கள் தான்.

1987 வன்னியர் சங்கப்போராட்டத்தின் போது போராட்டத்தை கட்டுப்படுத்த சாதிக்கலவரத்தை தூண்டியது காவல்துறை, இதை உளவுத்துறை அதிகாரி ஒருவர் தன்னுடைய பணிக்கால அனுபவங்கள் என்று குமுதம் ரிப்போர்ட்டரில் தொடராக எழுதியபோது குறிப்பிட்டிருக்கின்றார், அது போல சேரி பசங்கலாம் ரொம்ப ஆடுறாங்க படாச்சி(படையாச்சி) இதெல்லாம் நாங்க கேட்கமுடியாது, நீங்கதான் கேட்கனும் என்று தூண்டிவிட்ட கதைகளையும் நேரில் பார்த்திருக்கிறோம், ஆனால் அதையும் கேட்டுக்கொண்டு தகராறுக்கு சென்ற அறிவிலி சாதி வெறியர்கள் திருந்துவது விழிப்புணர்வு வரும்போது தான், அல்லது தலித்கள் அடிக்கு அடி என்று திருப்பி அடிக்கும்போது தான்.

இதோ இந்த இணையத்தில் "வெள்ளத்தனைய நீர்மட்டம்" என்று விட்டது சிகப்பு பதிவில் ஒரு அனானி தன் சாதிவெறி காழ்ப்புணர்ச்சியை காட்டியது, அதற்கு ஒரு பெரிய எழுத்தாளர் ஒருவர் ஆதரித்து எழுதிய கொடுமையும் நடந்தேறியது. இங்கேயே படித்தவர்கள் என்று கூறிக்கொள்பவர்களாலேயே பிறரும் தங்களுக்கு இணையாக தங்களைத்தாண்டியும் செல்கிறார்களே என்று எரிச்சலில் வெறுப்பை உமிழுகிறார்கள், கிராமங்களில் படிப்பறிவில்லாத நேற்றுவரை நமக்கு கீழே இருந்தவர்கள் இன்று படித்து, வீடு கட்டுவதா? என்ற பொறாமை உணர்வு எல்லாவற்றையும் எரிக்கின்றது. மேலும் இந்த அடுக்குமுறை மேலே உள்ளவர்களுக்கு எல்லா வசதிகளையும் தருவதால் அடித்து பிடித்து போராடி மேலேறும் ஒரு சமூகம் மேலேறியவுடன் தன் கீழுள்ள சமூகத்தை ஒடுக்கிறது. இது வரலாற்று காலங்களில் வலங்கை, இடங்கை போர்கள் நிரூபிக்கின்றன, இதோ கடந்த ஒரு நூற்றாண்டில் போராடி போராடி மேலே வந்த (அவர்கள் யாருடன் போராடினார்களோ அவர்களே இன்று அதோ நாடார் சமூகத்தை பாருங்கள் என்கிறார்கள்) சமூகம் இன்று தலித்களை எப்படி நடத்துகிறது? இது தான் வர்ணாசிரமத்தின் மிகப்பெரிய விசயம், அதை எதிர்ப்பவர்களையே அது உள்ளிழுத்து விடும்.

இவர்கள் தம் உரிமை எது என்று விழிப்புணர்ச்சி அடைய வேண்டும், எப்போது தாம் எங்கேயோ தம் உரிமைகளை இழக்கிறோம் என்று நினைக்கிறார்களோ அதே போல் தலித்களின் உரிமைகளை பறித்து வைத்திருக்கின்றோம் என்பதையும் உணர்ந்து விழிப்புணர்வு அடையவேண்டும், இவை இரண்டும் நடக்காத வரை வர்ணாசிரமத்தை காக்கும் காவல்நாய்களாகவும் சாதிவெறி மரத்தின் சல்லி வேர்களாகவும் தான் இருப்பார்கள்.

// ...முட்டாள் கும்பலுக்கும்... மூடர் கூட்டத்திற்கும் ...இழிபிறப்புகளுக்கும் (இதைத்தான் ஜாதித் திமிர் என்கிறார்களோ?) வேண்டுமானால் இது உண்மையாய்த் தெரியும்.//
இழிபிறப்பு என்பது நாகரிக வார்த்தை, இழிபிறப்பு என்று சொல்பவர்கள் நாகரீக கணவான்கள், ஆனால் தே...மகனே என்பவர்கள் அநாகரீகவாதிகளா? இழிபிறப்பு என்பதற்கும் தே...மகனே என்பதற்கும் பொருளில் ஏதேனும் வித்தியாசமிருக்கின்றதா? ஆனால் இணையத்தில் இழிபிறப்பு என்பது நாகரிக வார்த்தை, தே..மகனே என்பது கெட்டவார்த்தை, நல்ல வேளை தருமி அய்யா நீங்களாவது இதை கண்டித்தீர்களே!!!

//இன்று ஜாதியை - ஜாதியை மட்டுமே வைத்து தங்கள் ஓட்டு வங்கியை நிர்ணயித்து ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கும் அரசியல் கட்சிகளுக்கும், ஜாதிக்கட்சிகளுக்கும்தான் முதலில் ஆணி அடிக்க வேண்டும்.சுதந்திரத்திற்கு முன் இருந்ததைவிட இப்போது அதிகமான ஜாதி சச்சரவுகள் இருப்பதற்குக் காரணம் அவர்கள்தான்
//
சுப்பையா வாத்தியார் அவர்களே, இப்போது கூட சாதி சச்சரவே வராமல் போய்விடும், அதாவது அவரவர்களுக்கு வரையறுக்கப்பட்ட வேலைகளை, கொடுக்கப்பட்டவைகளை மட்டும் அவரவர்கள் செய்தால், தலித்கள் ஊரில் நுழையாமல் சேரியிலேயே வாழ்ந்து, செருப்பு போடாமல், பொது சுடுகாடு கேட்காமல் தனி டம்ளாரை எதிர்க்காமல் இருந்தால் ஏன் சாதிப்பிரச்சினை வரப்போகிறது, பிற்படுத்தப்பட்டவர்கள் விவாசய கூலி வேலை செய்தோமா? காவல் காத்தோமா என்று இல்லாமல் படிக்க வருவதினால் இடஒதுக்கீடு கேட்கிறார்கள், சிதம்பரம் கோவிலில் போய் தமிழில் பாடவேண்டும், நானும் பாடுவேன் என்று பிரச்சினை செய்கிறார்கள், சிதம்பரம் கோவிலில் தீட்சிதர்கள் மட்டும் தான் பாடவேண்டுமென்று முறையிருக்க இவர்கள் ஏன் இதை கேட்கிறார்கள், இதை கேட்காமல் இருந்தால் சாதிப்பிரச்சினையே வராது அல்லவா? என்பதில் எத்தனை நியாயம் உள்ளது, சுதந்திரத்திற்கு முன்பிருந்த நிலை இது, ஆனால் நீங்கள் சொன்ன அதே சாதிகட்சிகள் தான் ஒரு கிராமத்தில் வன்கொடுமை செய்யப்படும் தலித்துக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் நிற்கின்றன, இன்னமும் கேட்டால் தலித்களின் நிலமை மிக மோசமாகமல் இருப்பதற்கு காரணம் தலித் சாதிகட்சிகள் தான், அதே போல சிதம்பரம் கோவிலில் பாட போராடுவது நீங்கள் சொன்ன சாதிகட்சிகள் தான், சமூகத்தில் மறுக்கபட்ட கல்விக்காகவும், வேலைக்காகவும் போராடியது இன்னொரு சாதிக்கட்சி.

வாத்தியாரய்யா கொஞ்சம் கடந்த கால சாதிக்கட்சிகளின் அரசியலை பார்த்தீர்களென்றால் பாமக, விடுதலை சிறுத்தைகள், புதிய தமிழகம் மட்டுமே தாக்குபிடித்தன, முதலியாருக்காக ஆரம்பித்த கட்சிகளும், மற்ற சாதிகளுக்காக ஆரம்பித்த கட்சிகளும் காணாமல் போய்விட்டன, ஏனென்று யோசித்தீர்களென்றால் சில விசயங்கள் புரியும், முதலியார் சமூகத்திற்கு ஒரு கட்சி வந்து தான் அவர்களுக்கு படிப்போ, உரிமைகளோ வாங்கித்தரவேண்டுமென்பதில்லை, அதனாலேயே மற்ற கட்சிகள் காணமல் போக, எந்த மக்களுக்கு அரசியல் சமூக உரிமைகள் தேவைப்படுகிறதோ அந்த கட்சிகள் மட்டுமே நிற்கின்றன. இந்த சமூகங்களுக்கும் மற்றவர்களைப்போல சமுதாய, அரசியல் உரிமைகள் கிடைக்கும்போது இந்த கட்சிகள் தேவைப்படாது.

எல்லோருக்கும் அவரவர்கள் பங்கையும் உரிமையையும் இந்த சமுதாயமும் அரசும் தரும்போது சாதிக்கட்சிகளின் தேவை இருக்காது, அது வரை அடிப்படை அறியாமல் சாதிக்கட்சிகள் மீது மட்டையடி மட்டும் தான் இருக்கும்.

6:09 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://kuttapusky.blogspot.com/2007/01/blog-post.html

பின்னூட்டம்-1
இந்திரியங்களுக்கதிபதியான இந்திரன் தன் இந்திரியங்களை அடக்காவிட்டால் என்னென்ன அல்லல்படுமென்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது, அதற்கு எடுத்துக்காட்டாக தேவேந்திரனே இங்கு வந்துள்ளார், ஆயிரமாயிரம் ஆண்டுகளாக மக்களின் நல்வாழ்க்கை நெறியாக இருந்த சனாதான தர்மத்தை வெள்ளையர்களின் சதியால் சிலரின் சுயநலத்தால் இரு நூறுஆண்டுகளாக சனாதான தர்மத்தை தவறாக புரிந்து கொண்டு கேவலப்படுத்திய திரா'விட' பெத்தடின்கள் இதை இந்து மதத்தை கேவலப்படுத்த படமெடுத்து போட்டுள்ளன.

பின்னூட்டம்-2
கோவில், இந்து மதம், ஆரியம் இதில் நம்பிக்கை இல்லாத திராவிட குஞ்சுகளுக்கு காஞ்சிபுரம் கோவிலில் கொலை நடந்தால் என்ன? திருக்கோவிலூர் கோவிலில் சல்லாபம் நடந்தால் என்ன? கோவில், இந்து மதம், ஆரியம் , கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் ஏன் இதில் தலையிடுகின்றனர்?

பின்னூட்டம்-3
இந்த படமெடுத்த கலாச்சார காவலர் யார்? யார் யாரோடு எப்படி சல்லாபமாக இருந்தால் இவருக்கென்ன? எங்கே சல்லாபமாக இருந்தால் இவருக்கென்ன? தனிமனித சுதந்திரத்தில் தலையிடும்(தனி இல்லைங்க மூன்று மனித சுதந்திரம்) பாசிஸ்ட்டுகளின் வெறியாட்டத்தில் தொடப்பைக்கட்டை தூக்கும் தாக்குடேக்களின் அடிவருடிகள் இப்போது காமிராவோடு அலைகின்றன.

பின்னூட்டம்-4
நான் சொல்வதெல்லாம் என்னவென்றால் இந்த பெண்கள் இதற்கெல்லாம் கவலைப்படக்கூடாது, ஆகவே தான் சொல்கிறேன் அன்புமணி அவர்களின் குழந்தைகள் டெல்லியில் தமிழ் படிக்கவில்லை அன்புமணி ஒரு நல்ல தந்தை, எலிக்குட்டி சோதனை செய்து இந்த பின்னூட்டத்தை நான் தான் இட்டேனென்று இதன் நகலை என் பதிவிலும் இடுகிறேன்.

பின்னூட்டம்-5
முல்லாக்களுக்கு இந்த சதியில் தொடர்பிருப்பதாக சந்தேகப்படுகின்றேன்

பின்னூட்டம்-6
ஐயரை மட்டுமே குறை சொல்லுபவர்கள் அந்த பெண்களின் சாதியென்ன என்பதை தைரியமாக சொல்வார்களா?

11:53 PM  
Blogger குழலி / Kuzhali said...

http://karuppupaiyan.blogspot.com/2007/01/blog-post_08.html

வாய்யா கருப்பு, நீதானா அது, நேற்று பேசும்போதே சொல்லியிருந்திருக்கலாமல்லவா நீ தான் கருப்பு என்று, கடைசி வரை நீங்கள் தான் கருப்பு என்று சொல்லிக்கொள்ளவேயில்லையே!!! வலைப்பதிவு பக்கமே வருவதில்லை என்றீரே? கடைசியில் பார்த்தால் கருப்பே நீராக இருக்கின்றீர்....

9:20 PM  
Blogger குழலி / Kuzhali said...

http://gragavan.blogspot.com/2007/01/2007.html

வள்ளலாரும் பெரியாரும் ஒரே விசயத்துக்காகத்தான் போராடினாங்க, அவர்களுடைய பெரும்பாலான கருத்துகள் கீழே வள்ளலார் அல்லது பெரியார் என்று போடாமலிருந்தால் யார் பேசியது வள்ளலாரா? பெரியாரா? என்று குழம்புவோம் நீங்கள் இந்த பதிவில் வள்ளலார் பாதையில் சமூக பேதமை களைதலை பேசியிருக்கின்றீர்.

எஸ்.கே. அய்யா,
//ஏழாவது கருத்து ஒன்றைத் தவிர, மற்ற எல்லாவற்றிடுடனும் நான் மாறுபடுகிறேன் எனத் தெரிவித்துக் கொள்கிறேன், பணிவுடன்!
//
அந்த ஏழாவது கருத்து

7. கோயிலுக்குள் சிறப்பு மரியாதை என்ற பாகுபாடு ஒழிய வேண்டும். எல்லாரும் ஒன்று என்ற நிலை இருக்க வேண்டும். அரசனானாலும் ஆண்டியானாலும் இறைவனை ஒரே வழியில்தான் தரிசிக்க வேண்டும்.

"அரசனானாலும் ஆண்டியானாலும்" என்று இதில் ராகவன் சொன்னதால் எஸ்.கே. அய்யா ஒத்துக்கொள்கிறார், இதே வேறுமாதிரி சொல்லியிருந்தால் இதையும் ஒத்துக்கொள்ளாமல் இருந்திருப்பார் போலும்.


//ஒவ்வொன்றுக்குமாய்ப் பதிலிறுக்க மனமில்லை!//
காலம் காலமாக கடைபிடிப்பது, சாஸ்திரம், சம்பிரதாயம் நம்பிக்கை என்ற பெயரில் நடக்கும் அக்கிரமங்கள் நீங்க வேண்டுமென்று ஒரு மனிதன் ஆசைப்பட்டது வெறும் ஆசை மட்டுமே பட்டுள்ளார், இன்னும் இது நடந்தேறவில்லை, வெறும் ஆசைப்பட்டதற்கே உங்களுக்கு மனமில்லாமல் போய்விட்டது, ஏன் மனமில்லாமல் போய்விட்டது என்று விளக்கினால் நலம் இல்லையென்றால் அடிமடியில் கைவைத்ததால் தான் அய்யாவுக்கு மனமில்லையோ என்று நினைக்க கூடும்.

நன்றி

9:54 PM  
Blogger குழலி / Kuzhali said...

http://harimakesh.blogspot.com/2007/01/102.html

மறுபிறவி உண்டா இல்லையா என்பது பற்றி விஜய் தொலைக்காட்சியில் விவாதம் நடந்தபோது மறுபிறப்பு இல்லை என்று பேசியவர் சொன்ன ஒரு விசயம் இங்கே பொறுந்தி வரும்...

"பேரன் பொறக்கும் போது தாத்தா உயிரோட இருந்தா பேரன் தாத்தா மாதிரி பொறந்திருக்கான்னு சொல்லுவாங்க அதே தாத்தா உயிரோட இல்லைனா தாத்தாவே பொறந்திருக்காருனு சொல்லுவாங்க"

எங்க சித்தி பையனை நாங்கெல்லாம் தாத்தா மாதிரி இருக்கான்னு சொல்வோம், ஆனா எங்க சித்தப்பா தாத்தாவே பொறந்திருக்காருடானு சொல்லுவார்....

சுதந்திரத்திற்குமுன் 30கோடியாக இருந்த இந்தியாவின் மக்கள் தொகை இப்போ 100கோடிக்கு மேலே, இதே நிலைதான் எல்லா நாடுகளிலும் அதே நிலைதான், 100 வருடங்களுக்கு முன் 1 பில்லியனாக இருந்த மக்கள் தொகை இப்போ 6 பில்லியன், இந்த கூடுதலான 5 பில்லியன் ஆத்மாக்கள் அந்த 1 பில்லியன் ஆத்மாக்களிலிருந்து வட்டி குட்டி போட்டதா?

உடனே மற்ற உயிரினங்கள் மனிதனாக மாறிவிட்டது என்று ஜல்லியடிப்பதாக இருந்தால் அதெப்படி கடவுள் 100 வருசத்துல 500கோடி ஆத்மாக்களுக்கு மனிதனாக மாற புரமோசன் கொடுத்துட்டாரோ?

12:47 AM  
Blogger குழலி / Kuzhali said...

//மனிதனுக்குக்கீழான மிருகமாக பிறந்து அடுத்த பிறப்பில் மனிதராக புரொமோஷன் பெறுவதும்
//
அட அதெப்படிங்க சிங்கமாக பொறந்தா மானை அடித்து தான் சாப்பிடவேண்டும், இல்லையென்றால் அது பட்டினியால் சாக வேண்டியது தான், இப்போ சிங்கத்தோட நடத்தையின் அளவுகோல் என்ன? சிங்கம் மனுசனாக புரமோசன் கிடைக்க சிங்கம் என்ன செய்யவேண்டும், மானுக்கு மசாஜ் செய்துவிடனுமா? அல்லது முயலின் மூட்டுவலிக்கு மூலிகை மருந்து தடவி விடனுமா? மானுக்கு மனித புரமோசன் கிடைக்க அது புல் போன்ற உயிருள்ள பச்சை தாவரங்களை சாப்பிடாமல் இருக்கனும்? சிங்கத்துலயும் மானிலும் நல்ல சிங்கம், கெட்டசிங்கம்னு எப்படி பிரிப்பது, இதுங்கெல்லாம் எங்கே தத்துவம் பித்துவமெல்லாம் படிக்குது, எந்த இடத்தில் கோவில் கட்டி ஆத்மா, பரமாத்மா, ஜீவாத்மாவை தேடுதுங்க...

அப்புறம் மிருகங்களும் சனாதான தர்மத்தை கடைபிடித்து மனிதனாக பிறக்க புரமோசன் கிடைக்குதா?

காமெடி தாங்கலை போங்க....

1:17 AM  
Blogger குழலி / Kuzhali said...

//ஆத்மா உண்டா இல்லியா என்பதில் உண்டு, பாவபலன்கள் தன்னை அடுத்தபிறவியிலும் பாதிக்கும் என்கிற எண்ணம் இப்பிறவியில் வாழும் போது நெறிமுறைகளுடன் இன்னொருவருக்கு இடர்கள் தராமல் வாழ ஒருவனைச் செலுத்தும்.
//
அப்படியா.... அப்படியென்றால் காஞ்சிபுரம் வரதராச பெருமாள் கோவில் உள்ளேயே சங்கரராமன் கொலை நடந்திருக்காதே, அனுராதார ரமணன் குமுறி குமுறி அழுது பேட்டி கொடுக்கும் நிலை வந்திருக்காதே....

இன்றைக்கு கடவுளை நம்பாதவர்களை விட நம்புகின்றவர்கள் தான் அதிகம், ஆனால் கடவுளை நம்புகின்றவர்கள் செய்யாத கொலைகளா?, கொள்ளைகளா? கற்பழிப்பா? அவர்கள் வாங்காத லஞ்சமா? எல்லாவற்றையும் செய்துவிட்டு கடவுளுக்கு இலஞ்சம் கொடுத்து பாவங்களை கழுவிவிடலாமென்று தான் இத்தனையும் கடவுள் பக்தர்களால் நடக்குதோ...

5:34 PM  
Blogger குழலி / Kuzhali said...

இங்கே மறுபிறவி என்ற கருத்தாக்கத்தை போதிப்பதே மனுதர்மத்தை காக்கத்தான், நானும் மனிதன் தானே பிறகு ஏன் நான் தலித், எதற்காக இந்த உரிமை மறுப்புகள், ஏன் பிறப்பால் பிராமணர்களுக்கு மட்டும் சிறப்பு சலுகைகள் என்ற கேள்விகளுக்கு நியாயமான விடை சொல்ல முடியாது.

இது மனித உரிமை மீறல், இது ஏமாற்று வேலை ஆதிக்கம் செய்வதற்காக செய்யப்பட்ட சதிவேலை என்பதை மறைப்பதற்காக உருவாக்கப்பட்டது தான் இந்த மறுபிறப்பு விவகாரம்,


//மனிதனுக்குக்கீழான மிருகமாக பிறந்து அடுத்த பிறப்பில் மனிதராக புரொமோஷன் பெறுவதும், தற்போது மனிதனாய்ப் பிறந்து தனது கீழான செயல்களால் அடுத்த பிறப்பில் கீழிறக்கப்படும் டி-புரொமோஷனும் உயிர்ச் சுழற்சியில் இல்லாமல் என்ன?
//
குளு குளு வசதி, கறி சோறு, நல்ல சாப்பாடு, பாசம் காட்ட ஆட்கள் என நடிகை வீட்டில் நாயக பிறந்த ஆத்மா உயர்ந்ததா? மனிதனாக பிறந்தும் மனித உரிமைகள் கிடைக்காமல் நாயைவிட கேவலமாக நடத்தப்படும் மலம் திணிக்கப்படுபவராக பிறந்த ஆத்மா உயர்ந்ததா? நடிகை வீட்டு நாயாக பிறந்தது டீ புரமோசன? புரமோசனா ?மலம் திணிக்கப்படும் மனிதனாக பிறந்தது புரமோசனா?

5:51 PM  
Blogger குழலி / Kuzhali said...

http://vivaatham.thamizmanam.com/archives/20

நேரக்குறைவினால் என்னால் விரிவாக இந்த விவாதத்தில் பங்கேற்க முடியவில்லை, மிக மேலோட்டமாக எழுதப்பட்ட பதிவு இது, சட்டியில் இருப்பது ஆப்பையில் வருகிறதே என்று கவலைப்படுவது போலத்தான், கல்யாணத்திலிருந்து கருமாதி வரை சமூகத்தில் இருக்கும் சாதியை அரசியலில் இருக்கிறதே என்று கவலைப்படுவது.

இதே தலைப்பில் நான் தொடராக எழுத முனைந்து இரண்டு பதிவுகள் மட்டுமே எழுதியிருக்கும் கீழ் கண்ட பதிவுகளை படிக்க வேண்டுகிறேன்.

அரசியலில் சாதி-1
அரசியலில் சாதி-2

10:33 PM  
Blogger குழலி / Kuzhali said...

http://govikannan.blogspot.com/2007/01/blog-post_25.html

அருமையான கருத்துகள், மென்மையாக தடவிகொடுத்து தட்டியிருக்கின்றீர்கள்....


பொன்ஸ் திருக்குறளையும் நாம் மீள் வாசிப்பு செய்யவேண்டியிருக்கின்றது, அதில் பெண்ணடிமைத்தனம் இல்லையென்று சொல்லவில்லை ஆனால் நாம் பரிமேலழகர் உரையோடு நின்று பொருள்கொண்டிருப்பது சமீப காலங்களில் தான் தெரியவருகின்றது, அதில் நிறைய நாம் மேம்போக்காக அப்படியே வார்த்தைக்கு வார்த்தை பொருள் கொண்டிருக்கிறோம், சிங்கையில் பேராசிரியர் இரத்தினக்குமார் அவர்களின் திருக்குறள் ஆங்கில மொழிபெயர்ப்பு மற்றும் விளக்கவுரை நூல் வெளியீட்டு விழாவிற்கு செல்லும் வரை இது எனக்கு தெரியாது. ஆனால் நெடுஞ்செழியன் அவர்கள் இதற்கு முன்பே சிறப்பாக திருக்குறளுக்கு உரை எழுதியுள்ளார், முடிந்தால் பேராசிரியர் இரத்தினக்குமார் உரையையும் கொடுக்க முயல்கிறேன்.

நன்றி

10:59 PM  
Blogger குழலி / Kuzhali said...

http://iniyaislam.blogspot.com/2007/01/blog-post.html

//எல்லா இடங்களுக்கும் காலங்களுக்கும் பொருத்தமான மார்க்கமான இஸ்லாம் இவைகள் போன்ற நிர்ப்பந்திக்கும் சூழ்நிலைகளை அலட்சியப்படுத்தவே முடியாது.
//
பிரச்சினையே இதுதான் கண்மூடித்தனமான இந்த நம்பிக்கை தான், எந்த கொள்கையும் எந்த கோட்பாடும் எல்லா நேரங்களிலும் எல்லா காலங்களிலும் எல்லா இடத்திலும் சரியானதாக இருக்க முடியாது இஸ்லாம் உட்பட....

//மனித சமூகங்களில் பலவற்றில் பெண்கள் ஆண்களை விட அதிகமாக இருக்கின்றனர். அமெரிக்காவில் ஆண்களை விட குறைந்த பட்சம் எட்டு மில்லியன் பெண்கள் அதிகமாக இருக்கின்றனர். குயினா போன்ற நாடுகளில் 100 ஆண்களுக்கு 122 பெண்கள் வீதம் இருக்கின்றனர். தான்ஸானியாவில் 100 பெண்களுக்கு 95.1 ஆண்களே இருக்கின்றனர். இப்படி சமமற்ற பால் விகிதம் இருக்கும் போது ஒரு சமூகம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?
//
இந்தியாவில் 1000ம் ஆண்களுக்கு 923 பெண்கள் தானே இருக்கிறார்கள், அப்படி பார்த்தால் பெண்கள் தான் பலதாரமணம் செய்து கொள்ள வேண்டும், இது பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது.

நம்பு என்கிறது மதம், ஆராய்ந்து பார் என்கிறது பகுத்தறிவு....

11:01 PM  
Blogger குழலி / Kuzhali said...

http://kuttapusky.blogspot.com/2007/01/blog-post_25.html

வாஞ்சிநாதனின் இந்த வீர(?)வரலாறு நான் கல்லூரியில் படிக்கும் போது அங்கே கொஞ்சம் செல்வாக்காக இருந்த புதியதமிழகம் கட்சி வெளியிட்ட கையேட்டில் படித்த போது தெரிந்து கொண்டேன், சாதிக்கொடுமையை எதிர்த்து அதனாலேயே உயிர்விட்ட ஆஷ்துரைக்கு பொள்ளாச்சியில் அப்போது சிலர் மணி மண்டபம் கூட கட்டினார்களாம். அந்த கையேட்டிலே குறிப்பிட்டிருந்தது....

புதியதமிழகத்தின் அந்த கையேட்டை படித்தபின் தான் எனக்கு ஒரு சந்தேகம் எழுந்தது, ஜெனரல் டயர் நடத்திய ஜாலியன்வாலாபாக் படுகொலை ஏதும் ஆஷ்துரை நடத்தவில்லையே, வெறும் வெள்ளை அதிகாரி என்பதற்காகவா ஆஷ்துரை சுட்டுக்கொல்லப்பட்டிருப்பார் என்று கேள்வி எழுந்தது, ஆனால் இந்த கேள்வி புதியதமிழகம் கையேட்டை படித்தபின் தான் எழுந்தது, அதற்கு முன் ஊடகமும், புத்தகமும் சொல்வதை உண்மை என்று நம்பி நம்பி நம்பியதால் அந்த கேள்வி எழவேயில்லை எனக்கு.

நன்றி

1:21 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://govikannan.blogspot.com/2007/01/blog-post_2572.html

//இத்தனை நாள் சும்மா இருந்துவிட்டு பெரியார் வாழ்க, தமிழ் பாதுகாப்பு இயக்கம் என்று கூவுவதெல்லாம் வாக்காளனைக் கவரும் உத்தியாகவும் இருக்கலாம்.
//
பாவம் கருப்பு, கருப்பு பிராமணர்களை திட்டுவதற்கு மட்டும் பெரியார் வேசம் கட்டுவதைப்போலவே எல்லோரையும் நினைக்கிறாரோ?, கருப்புவிற்கு பாமக பற்றியும் தெரியவில்லை, பெரியார் பற்றியும் தெளிவில்லை, பாமக பற்றி தெரியவில்லையென்றால் தெரிந்து கொண்டு பேசலாம், இல்லையென்றால் குறைந்த பட்சம் வலைப்பதிவுகளில் எழுதியிருந்ததையாவது படித்துவிட்டு பேசலாம்.

சென்ற ஆண்டு மே மாதம் நான் எழுதிய இந்த பதிவிலிருந்து சில வரிகள்.
---------
பாமகவின் கொள்கைகள் என்ன?

கம்யூனிசத்தின் சிறந்த அம்சங்கள், சோஷலிசத்தின் முக்கிய அம்சங்கள், பெரியாரின் திராவிட கொள்கைகளில் சில, டாக்டர் அம்பேத்கார் அவர்களின் கொள்கைகள் என அனைத்து முக்கிய இசங்களிலிருந்தும் சிறந்தவைகள் கலந்த கலவைதான் பாமகவின் கொள்கை.
------------

மருத்துவரும் பாமகவும் திடீரெனவெல்லாம் பெரியார் வேசம் கட்டி ஆடவில்லை, பாமகவின் தொடக்ககாலத்திலிருந்தே திமுகவில் பெரியார்,அண்ணா,கலைஞர் என்று படம் வைப்பதை போல பெரியார்,மார்க்ஸ்,அம்பேத்கார் படங்கள் ஒரு குறியீடாகவே வைக்கப்படுகின்றது, இவை குறிப்பது என்னவென்றால் திராவிடம்,மார்க்சியம்,தலித்தியம் கலந்த கலவை தான் பாமகவின் கொள்கைகள் என்று குறிப்பிடவே.

அப்புறம் வழக்கம்போல பாமக பதிவென்றாலே ஆரம்பிக்கும் அதே பழைய பல்லவிகள் இங்கே பின்னூட்டங்களாக.

//எது எப்படி இருந்தாலும் அவர் ஒரு ஜாதிக்கட்சியின் தலைவர் என்பதை நாம் மறக்கக் கூடாது. //
அதானே, அவரே அதை விடுத்து வெளிவந்தாலும் அதனுள் இழுப்பதுதானே வேலை, ஊடகங்களுக்கும் சரி கருப்புவுக்கும் சரி.

//சென்னையின் மேயராக ஒரு தலித் வரக்கூடாதென கலைஞரிடம் மல்லுக்கு நின்றதையும் இங்கே நினைத்துப் பார்க்க வேண்டும்.
//
கருப்பு மீண்டும் தன் அரை குறை அறிவை நிரூபிக்கின்றது, கலைஞரிடம் மல்லுக்கு நின்றது துணை மேயர் பதவிக்கு, அதுவும் பாமகவில் யாருக்கு பதவி தரவேண்டுமென்பதை முடிவு செய்ய வேண்டியது ராமதாசே தவிர கலைஞர் பாமகவில் இந்த கவுன்சிலருக்கு பதவி கொடு, அந்த கவுன்சிலருக்கு கொடு என்று வேட்பாளரை முடிவு செய்யக்கூடாது, இந்த விசயத்தில் கலைஞருக்கு ஒரு பிரச்சினை, ராமதாசிற்கு வேறு பிரச்சினை இவையெல்லாம் தெளிவாகவே பத்திரிக்கைகளில் வந்தும் பாவம் கருப்புவிற்கு ஞாபகமறதி அதிகம் போல

//ஆனாலும் இதற்கு மேலும் பா.ம.க. வளருமா என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. அந்தக் கட்சி அதிகபட்சமாக எந்த அளவுக்கு வளரமுடியுமோ அந்த அளவுக்கு வளர்ந்து விட்டது. எதிர்காலத்திலும் கூட அது ஒரு முழுமையான மாநிலக் கட்சியாக வளர வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.
//
லக்கியின் இதை ஆமோதிக்கிறேன், பாமக வாங்கியுள்ள முத்திரை அப்படிபட்டது, பாமகவே அதன் வட்டத்தை விட்டு வெளியே வந்தாலும் கருப்பு மறக்க கூடாது என்று சொன்னாரே அதையே ஊடகங்களும் செய்து வருகின்றது, மேலும் இந்த முத்திரை அத்தனை சுலபமாக நீங்கக்கூடியதுமல்ல....

அதே சமயம் இன்று திராவிட கட்சிகளின் அடுத்த தலைமுறை எவ்வளவு தூரம் திராவிட பெரியார் கொள்கைகளை தூக்கிபிடிக்கும் என்ற சந்தேகம் எனக்கு உண்டு, இந்த நிலையில் இப்படியான ஒரு விசயம் மருத்துவரினால் தொடங்கப்படுவது அது ஓட்டுக்காக என்றாலும், ஓட்டுக்காக இல்லாமல் கொள்கைக்காக என்றாலும் எனக்கு எப்படியாயினும் திராவிடமும் பெரியார் கொள்கைகளும் தமிழக அரசியலில் நீர்த்துப்போகாமல் காப்பாற்றப்படுமாயின் அது எனக்கு மகிழ்ச்சியே.

3:10 AM  
Blogger குழலி / Kuzhali said...

//சைதாப்பேட்டைக்கு பாமகவுக்கு பங்க் குமார் மாதிரி எம்.எல்.ஏ வேட்பாளர்கள் தேர்வு செய்யும் விதம் மக்களிடையே நம்பிக்கையை விட கிலியை ஏற்படுத்துகிறது.
//
கருப்புவுக்கு சொன்னதே தான் ஹரிகரனுக்கும், செய்திகளை தெரிந்து கொண்டு பேசவும், கலைராஜன், ஆதி, சேகர்பாபு போன்றவர்களுக்கு மற்ற கட்சிகள் வாய்ப்பு வழங்கிய போதும் பங்க் குமாருக்கு சைதையில் நிற்க பாமக அனுமதிக்கவில்லை, இரண்டு முறையும் அங்கே நின்றது பாமகவின் இன்டலக்சுவல்களில் ஒருவரான சி.ஆர்.பாஸ்கரன்.

4:15 AM  
Blogger குழலி / Kuzhali said...

//பங்க் குமார் சைதை பாமக வேட்பாளராக கூட்டணிக்கட்சி திமுக தந்த அழுத்தத்தினால் நிறுத்தப்படவில்லை.
//
ஆகா ஹரிகரரே இதென்ன கூத்து, பாமக-திமுக கூட்டணி பேச்சில் கோ.க.மணி தானே கூட இருந்தார், நீங்க எப்போ அங்க போனிங்க? மறந்துவிட்டீர்களா திமுக திராவிட கட்சியென்பதை?

பாமகவின் உள்விவகாரங்களில் தலையிடுவதை மருத்துவர் எப்போதும் யாரையும் அனுமதிப்பதில்லை, உதாரணம் கடந்த சென்னை மாமன்ற துணைமேயர் தேர்தலுக்கு கலைஞர் கூறிய பாமக வேட்பாளரை நிறுத்த வேண்டுமென்பதற்கு யாரை நிறுத்த வேண்டுமென்பதை பாமக தான் முடிவு செய்யும் எனவே அந்த பதவியே தேவையில்லை என்று கூறியவர் மருத்துவர்.

செய்திகளை தெரிந்துகொண்டு பேசவும், தப்பும் தவறுமாக அள்ளித்தெளிக்க வேண்டாம் ஹரிகரரே, உம் விருப்பத்திற்கு விளக்கமும் அர்த்தமும் பொருளும் சொல்ல இதொன்றும் உம் சனாதான தர்ம இந்து மதம் அல்ல....

8:38 AM  
Blogger குழலி / Kuzhali said...

//நான் கேட்கிறேன்... ராமதாசுக்கு பெரியார் யார் என்று தெரியுமா? வேண்டாம். உங்களுக்காவது பெரியார் யார் என்றாவது தெரியுமா?
//
கருப்பு, பெரியாரை உம்மை விட வேறு யாராலும் அதிக அளவில் கேவலப்படுத்தியிருக்க முடியாது. நீர் கருப்பு வேசம் கட்டுவதற்கு முன் ஒரு பதிவு வைத்திருந்தீரே அதில் எத்தனை பெரியார் கருத்துகள் பதிவு செய்தீர், அது ஒரே ஆன்மீக குவியலாகத்தானே இருந்தது(அதுவும் டுபாக்கூரோ என்னமோ) இப்போ என்னடானா பெரியார் வேசம் கட்டி ஜிங்கு ஜிங்குனு ஆடுறீரோ?! கருப்பு வேசம் கட்டுவதற்கு முன்பும் பின்பும் ஒரு விசயத்தில் மட்டும் மாறவேயில்லை, கண்மூடித்தனமாக பிராமணர்களை திட்டுவதில் மட்டும் மாறவில்லை.

எல்லாம் சரி கருப்பு உம்மோட பூணுலை கழற்றிவிட்டாயா? சட்டைக்குள்ளேதானே இருக்கு என்று கருப்பு வேசத்தினுள் மறைத்துக்கொண்டாயா?

5:43 PM  
Blogger குழலி / Kuzhali said...

http://stationbench.blogspot.com/2007/02/blog-post_03.html

உங்களின் இந்த பதிவில் பல கருத்துகள் என்னால் ஏற்றுக்கொள்ளக்கூடியதே துரோகம் என்ற சொல் தமிழக அரசியலில் அதன் பொருள் இழந்து வருகின்றது.

நீங்கள் இந்த பதிவில் காண்பித்த மற்றைய உதாரணங்களும் உள்ளாட்சி மன்றத்தலைவர் தேர்தலில் நடந்த விடயங்களும் ஒரே தட்டில் வைத்து பார்க்கலாமா என்றால் என்னை பொறுத்தவரை இல்லை, திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளிடையே எந்தெந்த இடங்களில் யார் யார் நிற்பது என்று பேசி முடிவு செய்து உடன்பாட்டில் கையெழுத்தும் இட்டனர், தேர்தலுக்கு முன்பே எந்தெந்த தலைவர் பதவி யாருக்கு என்று பேசி முடிவு செய்யலாம் என்ற போது (எந்த கட்சிக்கு ஒதுக்கப்படுகிறதோ அங்கே அந்த கட்சி கவுன்சிலர்கள் பெரும்பாலாக நிறுத்தலாம் என்று திமுக தவிர்த்த அத்தனை கூட்டணி கட்சிகளும் அந்த நேரத்தில் வலியுறுத்தின) திமுக முதலில் தேர்தல் முடியட்டும் பிறகு தலைவர் பதவி பற்றி பேசலாம் என்றது, திமுக கவுன்சிலர்களின் வெற்றிக்கு கூட்டணிகட்சியனரின் பங்கு குறிப்பிடத்தக்கது என்பதை மறுக்க முடியாது, ஆனால் எந்த உள்ளாட்சி மன்றத்தலைவர் பதவியையும் திமுகவினரின் ஒத்துழைப்பு இல்லாமல் பெறக்கூடிய நிலை கூட்டணி கட்சிகளுக்கு, இந்த நிலை ஏற்படுமென்பதை எதிர்பார்த்துதான் திமுக கூட்டணி கட்சிகள் தேர்தலுக்கு முன்பே தலைவர் பதவிக்கான ஒதுக்கீட்டை செய்து கொண்டு அங்கே அந்த கட்சியின் கவுன்சிலர்களை பெரும்பான்மையாக நிறுத்தலாம் என்று கூறின, திமுக கூட்டணி கட்சிகள் தேர்தலுக்கு முன்பு அச்சப்பட்ட மாதிரியே எல்லா தலைவர் பதவிகளும் திமுக ஒத்துழைத்தால் மட்டுமே வெற்றிபெற முடியும் என்ற நிலை, தேர்தலுக்கு பின் தலைவர் பதவில்க்காண கூட்டணி ஒப்பந்தமும் கையெழுத்தானது, ஆனால் அதன் பிறகு தான் திமுக அமைச்சர்களுக்கும் மா.செ.க்களும் இத்தனை கவுன்சிலர்கள் நம்மிடம் இருக்கிறார்கள் நாமெதற்கு வேறு கட்சிக்கு இதை விட்டுத்தரவேண்டுமென்று பல இடங்களில் கூட்டணி கட்சிக்கு எதிராகவே ஆட்களை நிறுத்தினார்கள் ஆனால் வசதியாக திமுக கவுன்சிலர்கள் வெற்றி பெற்றதில் கூட்டணி கட்சிகளின் பங்கை மறந்துவிட்டனர். இதனால் பாமகவிற்கு 40 இடங்களுக்கும் மேல் இழப்பு (கிட்டத்தட்ட 50%) இதே போல காங்கிரஸ் 50%க்கும் மேலான இடங்களை இழந்துள்ளது, எல்லா கூட்டணி கட்சிகளுமே இப்படியான இழப்பு ஏற்பட்டுள்ளது, திமுக கவுன்சிலர்கள் வெற்றிக்கு கூட்டணி கட்சியினர் தேவைப்பட்டனர், ஆனால் கூட்டணி கட்சியினரின் தலைவர் பதவிக்கு திமுக கவுன்சிலர்கள் கை கொடுக்கவில்லை இதுவே துரோகம் என்று மருத்துவரால் சொல்லப்பட்டது, மருத்துவர் வெளிப்படையாக சொல்லிவிட்டார் காங்கிரசிலும் மற்ற கூட்டணி கட்சிகளாலும் சொல்ல இயலவில்லை, ஆனால் இந்த சூழலை கணக்கில் கொள்ளாமல் இந்த பதிவு எழுதப்பட்டுள்ளது ஆச்சரியமே....

ஒரு வேளை பாமக இதனால் பாதிக்கப்படாமல் இருந்திருந்தாலும் என் நிலைப்பாடு இதில் இப்படியே இருக்கும் (டிஸ்கி போட வேண்டிய அளவிற்கு என் மீது பாமக முத்திரை உள்ளது)


அரசதிகாரமே முக்கியம் (பச்சையாக சொல்வதென்றால் சீட்டே முக்கியம்) என்று கூட்டணி பேரத்தை ஒரு கட்டத்திற்கு நகர்த்தியவர் மருத்துவர்...

உடன்பாடு கையெழுத்து ஆன பின்பும் கூட்டணி உறுதியல்ல என்று கையெழுத்தான உடன்பாட்டை உடைத்து அடுத்த நிலைக்கு கூட்டணி பேரத்தை எடுத்து சென்றவர் வை.கோ.

தேர்தல் மனுத்தாக்கல் முடிந்த பின்பு அணி மாறி அதற்கும் அடுத்த நிலைக்கு எடுத்து சென்றவர் திருமா.

என படிப்படியாக கூட்டணி கட்சிகளுக்கிடையேயான நம்பிக்கையின்மையை நகர்த்தினார்கள் என்றால் கூட்டணி சோற்றில் தன் பங்கையும் எடுத்துக்கொண்டு எல்லாம் முடிந்த பின் அடுத்தவர் பங்கிலும் கைவைக்கும் நிலையை அதாவது கூட்டணி கட்சிகளுக்குள் உள்ள நம்பிக்கையின்மை நிலையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியுள்ளது திமுக.

இனி கூட்டணி கட்சிகள் தங்களுக்குள் சந்தேகத்தோடே வலம்வரும் என்பது மட்டும் உண்மை.... என்னதான் கூட்டணியென்றாலும் கூட்டணி கட்சிகள் வெற்றிபெற வேண்டிய முனப்போடு செய்யும் வேலைகள் இனி எந்த கட்சியிலும் இருக்காது, தம் கட்சி வெற்றி மட்டுமே குறிக்கோளாக இருக்கும் நிலை வருங்காலங்களில் வரலாம்.

நன்றி

5:54 AM  
Blogger குழலி / Kuzhali said...

//உங்கள் கருத்தை மதிக்கிறேன். ஆனால் அது "தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால்தான் தெரியும்" என்பதற்கு ஏற்ப டாக்டர் ராமதாஸ் செயல்பட்டிருக்கிறார் என்பதில் இருந்து எனது பார்வை தொடங்குகிறது.
//
ம்... ஏற்கக்கூடியதே என்ற போதும் கூட்டணி, நம்பிக்கை என்ற அளவில் வேட்புமணுத்தாக்கல் முடிந்து பின் திருமா கடைசி நாளில் அணி மாறியதே என்னால் ஜீரணிக்க முடியவில்லை, இது இன்னமும் மோசம் என்றே எனக்கு தோன்றியது, ஒரு ஒருவருக்கு ஒரு உடையுமிடம், உங்களுக்கு முன்பே உடைந்துவிட்டது எனக்கு உடைந்தது அந்த இடம்.

//மக்களால் நேரடியாக தலைவர்/மேயர் தேர்ந்தெடுக்கப்படுவதில் இருந்து பாதையை அரசு மாற்றிய போதே இதெல்லாம் நடக்கும் என்று எதிர்பார்த்ததுதான்.
//
மக்களால் நேரடியாக தலைவர்/மேயர் தேர்ந்தெடுக்கப்பட்டு பெரும்பாண்மை கவுன்சிலர்கள் எதிர் கட்சியாக இருந்தால் நிலமை ரொம்ப மோசமாக இருக்கும், கரூர் நகராட்சி, விழுப்புரம் நகராட்சி என்று பல நகராட்சிகள் கடந்த காலங்களில் உதாரணமாக இருந்தன, அங்கேயெல்லாம் தலைவர் ஒரு கட்சியாகவும் கவுன்சிலர்கள் வேறு கட்சியாகவும் இருக்க ஒரு கூட்டம் கூட உருப்படியாக நடக்கவில்லை, இப்போதும் கூட நேரடி மேயர்/ தலைவர் தேர்தலில் எனக்கு நம்பிக்கை இல்லை, இதில் மருத்துவருக்கு வேறு கருத்து உண்டு (யாருப்பா அங்க நான் பாமக ஊதுகுழல் என்பவர்கள் :-))) இங்கே கவனிக்கவும், பாமகவின் நிலைக்கும் என் நிலைக்கும் இந்த விசயத்தில் உள்ள முரண்பாட்டை)

மற்றபடி முத்திரை விசயம் உங்களுக்கு கட்டுரைக்கு கட்டுரை மாறும் :-))))

9:42 AM  
Blogger குழலி / Kuzhali said...

//இப்படி ஏதேனும் நடந்திருக்கிறதா? கையெழுத்தான உடன்பாட்டை வைகோ மீறியிருக்கிறாரா? தயவுசெய்து விளக்குங்கள். உடன்பாடு எட்டப்படும் முன்பே கருத்து வேறுபாடு காரணமாக அவர் வெளியிருக்கிறார். தொகுதி எண்ணிக்கை, எந்தெந்தத் தொகுதிகள் என்று முதலிலேயே உடன்பாடு கையெழுத்திடும் நேர்மை தமிழகத்தின் பிரதான கட்சிகளிடம் இருக்கிறதா? அறிந்துகொள்ள ஆவலாக இருக்கிறேன்.
//
2001 சட்டமன்ற தேர்தலில் திமுக-மதிமுகவோடு முதலில் 21 அல்லது 23 (சரியான எண்ணிக்கை தெரியவில்லை) தொகுதிகளுக்கு ஒத்துக்கொண்டு கையெழுத்தும் ஆகி பத்திரிக்கைகளில் வெளியானது, அதன் பின்பே எந்தெந்த தொகுதிகளை பிரித்துக்கொள்வது என்ற நேரத்தில் பிரச்சினை ஆகி கூட்டணி முறிந்தது

9:44 AM  
Blogger குழலி / Kuzhali said...

//கூட்டணிக்கான நம்பகத்தன்மை இல்லாதவர் ஜெயலலிதா என்று இதுவரை சொன்னதெல்லாம் என்ன ஆச்சு?
//
இன்னமும் அப்படியே உள்ளது , தேவையேற்படாததாலேயே முந்தைய பின்னூட்டத்தில் ஜெயலலிதாவை சேர்க்கவில்லை, இவங்க எல்லாரையும் விட டாப் அவங்க தான்.... யாரையுமே மதிக்காமல் தன்னிச்சையாக தொகுதி பங்கீடு செய்வது, லயன் ஷேர் கணக்காக தன்னிட்சையாக கூட்டணி பேச்சுவார்த்தை என்பதே இல்லாமல் தன்னிட்சையாக தொகுதிகளை அறிவித்துவிட்டு பின் கூட்டணி கட்சிகளை மோத விடுவது, முடிவுகள் எடுப்பது, ராஜ்யசபா சீட் தரேன் என்று முடிவு செய்துவிட்டு தேர்தல் முடிந்து வெற்றி பெற்றவுடன் கழட்டிவிடுவது என அந்தம்மா ரேஞ்சே வேற, நான் ஆயிரங்களில் கணக்கு பேசிக்கொண்டிருக்கும்போது நீங்கள் கோடிகளின் கணக்கை கேட்கின்றீர் :-)))

9:50 AM  
Blogger குழலி / Kuzhali said...

//தொகுதி எண்ணிக்கை, எந்தெந்தத் தொகுதிகள் என்று முதலிலேயே உடன்பாடு கையெழுத்திடும் நேர்மை தமிழகத்தின் பிரதான கட்சிகளிடம் இருக்கிறதா? அறிந்துகொள்ள ஆவலாக இருக்கிறேன்.//

முதலில் தொகுதி எண்ணிக்கை, அதன் பின் எந்தெந்த தொகுதிகள் என்று கையெழுத்திட்டு தாள்களை பரிமாறிக்கொள்வதை 1999 பாராளுமன்ற தேர்தலில் இருந்தே(அதற்கு முன்பே கூட இருக்கலாம்) பார்க்கின்றேனே தொலைக்காட்சிகளில்

10:08 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://kazugu.blogspot.com/2007/02/blog-post.html

//இந்த வருஷம் அவார்டு "தாண்டுக்கு" தானாம்.
//
மற்ற யாரும் கேட்கிறார்களோ இல்லியோ என்னால கேட்காம இருக்க முடியாது, தாண்டு(?) முதலில் ப்ளாக்கா? இல்லையே அவர்களே அதை வலைப்பதிவு என்று சொல்லிக்கொள்வதில்லையே,

தமிழ்மணம், தேன்கூடு போன்றவைகள் தானியங்கி திரட்டி என்றால் நீங்கள் குறிப்பிடுவது சிலரால் வலைப்பதிவுகளை படித்து சுட்டியளிக்கும் ஒருவிதமான வலைதிரட்டி மாதிரிதானே, அப்புறம் எப்படி இது வலைப்பதிவாகும்? கொழப்புறிங்களேப்பா!@##$%^&*(

9:01 PM  
Blogger குழலி / Kuzhali said...

http://mugamoodi.blogspot.com/2007/01/indibloggies-awards-2006.html

பதிவர் முகமூடி, நீண்ட நாட்களுக்கு பிறகு சந்திக்கிறோம், இது தொடர்பான என் பதிவு முகமூடிக்கு ஜீரி(நடுவர்?!)யாக இருக்க தகுதி உண்டா?

3:51 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://surveysan.blogspot.com/2007/02/blog-post_06.html

//நான் புனைப்பெயரில் எழுதுவதால், லக்கிலுக் என்னை 'ஜோக்கர்' லிஸ்ட்ல சேத்துருக்கரத பாத்தேன்.
//
//இது நாள் வரைக்கும் லக்கிலுக் அவர் சொந்தப் பெயர் இல்லன்னு நெனச்சேன். வித்யாசமான பேரா இருக்கு. நல்லது.
//
அனாமதேய பதிவருக்கும் புனைப்பெயருக்கும் வித்தியாசம் தெரியாதுங்களா சர்வேசா? சர்வேசன் அனாமதேய பதிவர், லக்கிலுக் புனைப்பெயரில் எழுதும் பதிவர் என்பதாவது புரிகின்றதா? இல்லைங்களா? ம்... தூங்கறவங்களை எழுப்பலாம், தூங்கறமாதிரி நடிக்கிறவங்களை எழுப்ப முடியுமா?

11:10 PM  
Blogger குழலி / Kuzhali said...

http://mugamoodi.blogspot.com/2007/01/indibloggies-awards-2006.html

//நீங்கள் நடுவராக இல்லாவிட்டால், கள்ள ஓட்டு போட்டு இந்தக் கும்பல் வெல்ல முயற்சிக்கிறதோ என்ற சந்தேகத்தை விளைவிக்கிறது. :-))//
அது சரி, இன்னொரு ஜீரியான பத்ரியை இப்படி ஒரேயடியாக வாரிவிட்டுட்டிங்களே, அப்போ பத்ரியும் நடுவர் குழுவில் தானே இருக்கார்? அய்யயோ அப்போ பத்ரி என்ன செய்வார்? புரியலையா? அட விடுங்க புரியலைனாலும் மத்தவங்களுக்கு புரியும், அஞ்சாநெஞ்சன், நியாயத்தராசின் முள்ளை நடுவில் பிடித்துக்கொண்டிருப்பவரை தேர்தல் பார்வையாளராக போட தேர்தல் ஆணையம் தேடிக்கொண்டிருக்கின்றதாம், பேசாம நீங்களே ரெக்கமன்ட் செய்யலாம். :-)

//இடஒதுக்கீடு என்று வரும்போது தகுதி முக்கியமில்லை. ஆனால் இப்போது குழலிக்குத் தகுதி தேவைப்படுகிறது. வெளிநாட்டில் இருக்கிற பிற்படுத்தப்பட்ட தமிழர் என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறீர்களே. :-)) அந்தத் தகுதி உங்களுக்குப் போதாதா - குழலியின் அகராதிப்படி என்று கேட்கத் தோன்றுகிறது. :-))
//
மிக்க நன்றிங்கோவ்... இப்படித்தான் அப்பப்போ வெளிப்படுத்திக்கிறிங்க ... எதை வெளிப்படுத்திக்கிறிங்களா அட இதுவேற தனியா நான் சொல்லனுமோ?!!! பாத்துங்கோவ் இந்தியாவில தான் சட்டமெல்லாம் பரணையில தூங்குது , அந்த ஊர்ல இப்படி எவனையாவது பேசி கீசி தொலையாதிங்கோ.... ஒரு பாசத்துல தான் சொல்றேன், எனக்கு அறிமுகம்(அட இண்டர்நெட்லதாங்கோ) ஆனவங்க யாரும் அங்கே 'உள்ளே' இல்லை, அப்புறம் எனக்கு இண்டர்நெட்ல தெரிஞ்சவர் ஒருத்தர் 'உள்ள' இருக்காருங்கற பெருமை வந்துடப்போகுது :-)

//தன் கொள்கைகளை மட்டும் எழுதிக் கொண்டிருப்பவர் இந்தப் பரிசுகளுக்கும் பரிசு கிடைப்பதற்கு முன்னயே யார் நடுவர் என்று இப்படி அலட்டிக் கொண்டும் "அழுவாரா" என்ன? தனக்குச் சாதகமான தீர்ப்பு வரவில்லை என்றால் நீதிபதியைக் குறை சொல்கிற கும்பல், இப்படி எழுதுவது ஆச்சரியமில்லை.
//
அட நீங்கவேற இந்த இண்டிப்ளாக் அவார்டு பரிசு வாங்கிதான் சிங்கப்பூர்ல ஒரு கோண்டோவும் சென்னையில வேளச்சேரியில ஒரு 40 இலட்சத்துக்கு ஒரு ஃப்ளாட்டும் வாங்கலாம்னு ப்ளான் போட்டிருக்கேன் :-)

6:39 AM  
Blogger குழலி / Kuzhali said...

//குழலியைப் போன்ற ஜாதி வெறியர்களின் ஆட்சேபத்தை இண்டிபிளாக்ஸ் நிர்வாகம் புறக்கணிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
//
ஆகா போன பின்னூட்டத்துல இத்த உட்டுட்டனே, எனக்கு அடிக்கடி ஒரு பின்னூட்டம் வரும் என்னை ஜாதிவெறியன்னு சொல்லி, தமிழ்ல, இங்கிலிபிசுல, தங்கிலீசுல, ஆனா மேட்டர் என்னமோ ஒன்னுதான், என்னை ஜாதிவெறியன்னு சொல்லி அப்புறம் கொஞ்சம் என்னை பாராட்டி :-) வரும், யார்ரா அது என்னையும் போய் ஜாதிவெறியன்னு சொல்லி போடுறாங்களேனு நினைச்சிக்கிட்டு இருந்தேன்.... புரியுது புரியுது இதான் மேட்டரா?!

6:48 AM  
Blogger குழலி / Kuzhali said...

//இதை எழுதியது நீங்கள் என்றால், ஜாதிவெறியர் என்று அனானியாக எழுதியது நான் என்று நிரூபிக்கவும். இல்லையென்றால் உங்களைவிடப் பெரிய ஜோக்கர் யாருமில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
//
பிகேஎஸ், நானேத்தான் எழுதினேன், ஆனால் நீங்கள்தான் அனானியாக ஜாதிவெறியர் என்று எழுதினீர்கள் என்றா எழுதியிருக்கிறேன், நல்லா படிச்சி பாருங்க, தமிழ் தெரியுமில்ல? :-)

பின்குறிப்பு:
இப்படியாக எழுதுவது சிலருக்கு மட்டும் சொந்தமில்லை, எல்லோருக்கும் இந்த கலை கை வரும்

மற்றொமொரு பின்குறிப்பு:
இந்த பின்னூட்டம் அதுக்கு பதில் என தொடர்ந்து ஃபாலோ செய்வதற்கு தற்போதைக்கு நேரமில்லை, அதைவிட வேறு வேலைகள் இருக்கிறது, எனவே பெருசா நீளமா எதுனா பின்னூட்டம் போட்டா உடனே பதில் போடனும்னு எதிர்பார்க்காதிங்கோ....

6:09 PM  
Blogger குழலி / Kuzhali said...

http://surveysan.blogspot.com/2007/02/blog-post_06.html

//புருஷோத்தமன் அண்ணை
எப்படிங்கண்ணா இந்த மாதிரி பதிலளிக்கமுடிகிறது உங்களால்//

சர்வேசா இங்கே பாருங்க அனானிக்கு கூட என் பெயர் தெரிந்திருக்கின்றது. :-))

அனாமதேய பதிவர்கள் எல்லோரிடமுமா கேட்கிறோம், இல்லையே, யார் போட்டி நடத்துகிறார்களோ யார் இவர் சிறந்த பதிவர், அவர் சிறந்த பதிவர் என அத்தாரிட்டி கொடுக்கின்றார்களோ அவர்களிடம் தானே எதிர்ப்பு தெரிவிக்கொன்றோம், மற்ற பதிவர்களின் சிறப்பை அலசும் முன் அதை செய்பவர்கள் முன்னின்று நடத்துபவர்கள் யாரென்று தெரிவது அவசியம் என நான் நினைக்கிறேன்.

7:07 PM  
Blogger குழலி / Kuzhali said...

//இப்போது சொல்கிறேன். இதை எழுதியது நீங்கள் என்றால், ஜாதிவெறியர் என்று அனானியாக எழுதியது நான் என்று நிரூபிக்கவும். இல்லையென்றால் உங்களைவிடப் பெரிய ஜோக்கர் யாருமில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
//
என்னங்க பி.கே.எஸ். வழக்கமா கேஸ் போடுவேன்னு கிளம்புவிங்க, இங்க என்னடானா ஜோக்கர் பட்டம் கொடுக்கறதோட நிறுத்திட்டங்க? :-)

அதான் சொன்னேனே சில கலைகள் சிலருக்கு மட்டும் சொந்தமில்லை, அந்த கலைகளை பயன்படுத்த ஆரம்பித்தால் என்ன ஆகும்னு தெரிஞ்சிக்கலாம் அதிபுத்திசாலிகள் எல்லாம்.

நன்றி

7:25 PM  
Blogger குழலி / Kuzhali said...

http://surveysan.blogspot.com/2007/02/blog-post_06.html

//தேன்கூடு போட்டி, தமிழ்மண ஸ்டார் பதிவர், அங்கயெல்லாம் கலந்துக்கும்போதும், செலக்ட் ஆகும்போதும், அந்த குழுவில் யார் இருந்தாங்கன்னு கேட்டா சேருவீங்க/சேந்தீங்க? //
தேன்கூடு போட்டியில் கலந்து கொண்டதே அல்ல, தமிழ்மணத்தில் நான் ஸ்டார் வலைப்பதிவராக இருந்த போது அதை நடத்தியவர் காசி, அதற்காக என்னை தொடர்பு கொண்டவர் மதி... இவையெல்லாம் தமிழ்மணத்திலேயே அறிவிக்கப்பட்டிருந்தது.

//உங்க கருத்துக்கு எதிர் 'கருத்து' சொல்ற அணியைச் சார்ந்தவன் நான் என்னும் நெனைப்புல நீங்க இப்படியெல்லாம் சொல்றீங்கன்னு நெனைக்கறேன்.
//
நான் நினைப்பது உங்களுக்கு எப்படிங்க தெரியும்? இது வரை நீங்கள் யாரென்று தெரியாது, அப்படியிருக்க நீங்கள் என் கருத்துக்கு எதிர் கருத்து சொல்லும் அணி(?!)யை சேர்ந்தவன் என்று எப்படி சொல்வது? எது எப்படியாகினும் அந்த விருது, அவார்டு, சிறந்த பதிவர் இதற்கு போட்டி என சொல்பவர்கள் தங்களை வெளிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பது என் எண்ணம்.

8:39 PM  
Blogger குழலி / Kuzhali said...

http://kuttapusky.blogspot.com/2007/02/blog-post_08.html

வரவனை, கொஞ்சம் வருத்ததுடனே இதை எழுதுகிறேன், எதிர் கருத்துடைய பதிவர்களின் தனிப்பட்ட நட்பு தனிப்பட்ட உரையாடல்கள் பொதுவில் வைக்கப்படுவது சரியானதாக எனக்கு தெரியவில்லை, இதை ஆரம்பித்தது டோண்டு தான் என்றாலும் (அதற்கும் முன்பு யாரென்றெல்லாம் தெரியவில்லை, சுட்டியெல்லாம் எடுத்து தரலாம், முத்துக்குமரன் பதிவில் டோண்டு அவர்கள் இதற்கு பிள்ளையார் சுழி போட்டுள்ளார்) இது இனி வருங்காலத்தில் எதிர்கருத்துடையவர்களுடன் தனி நட்பு ஏற்படும் தொடரும் சூழலை பாதிக்கும் என கருதுகிறேன், தெளிவான பிளவுக்கு வழிவகுக்கும் போல தோன்றுகின்றது, சொல்லத்தோன்றியது சொல்லிவிட்டேன்.

நன்றி

3:27 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://sugunadiwakar.blogspot.com/2007/02/blog-post_05.html

//The allegation against Dr.Venugopal is yet to be proven.
No court has convicted him.So dont jump to conclusions.//
அடப்பாவிகளா? அப்பாவியான வீரப்பனை கொன்னுபுட்டாங்களே, அவரு மேல கூடத்தான் ஒரு கொலை கேஸ் கூட கோர்ட்ல தீர்ப்பாகலை...

//லல்லுபிரசாத்தின் மீதுகூடத்தான் குற்றம் நிரூபிக்கப்படவில்லை. ஆனால் அவரை ஊழலின் உறைவிடமாய்ப் பார்ப்பனப் பத்திரிகைகள் சித்தரிக்கவில்லையா என்ன? ஒரு குலத்துக்கொரு நீதி?
//
சங்கராச்சாரி மீதான கொலை வழக்கு, வெணுகோபால் னா கெளம்பிடுவாங்கப்பா வழக்கு இன்னும் நடக்கிறது குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்படவில்லையென்று அது மத்தவங்களுக்கு மட்டும் இல்லை, ஒரு குலத்துக்கு ஒரு நீதின்னு போட்டு கேள்விகுறி போட்டிருக்கிங்க அதுல சந்தேகம் வேறய உங்களுக்கு, அந்த கேள்விகுறியை தூக்குங்க "ஒரு குலத்துக்கொரு நீதி" எல்லா மன்றங்களிலும் நீதிமன்றம் உட்பட...

7:47 PM  
Blogger குழலி / Kuzhali said...

http://blog.tamilsasi.com/2007/02/blog-post.html

காஷ்மீரில் மட்டுமல்ல, இம்மாதிரி அதிரடிப்படையாளும் நடத்தப்பட்டுள்ளது, அப்பாவிகளை கொன்றுவிட்டு பச்சை நிற ஆடைகளை அணிவித்து வீரப்பன் ஆட்கள் என்று சொன்னவைகள் இங்கேயும் இருக்கின்றன, காவல்துறை, இராணுவம் இவர்களை பொறுத்தவரை பொதுமக்கள் உயிர் ஒரு பொருட்டல்ல, ஆனால் அவர்களுக்கு ஆதரவாக அடிக்கும் டயலாக்குகளுக்கு மட்டும் நாட்டில் குறைச்சல் இல்லை.

வலைப்பதிவில் இது பற்றி எந்த பதிவுகளும் வந்ததாக தெரியவில்லை.

நன்றி

3:02 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://mugamoodi.blogspot.com/2007/01/indibloggies-awards-2006.html

//Please dont worry too much about it. Thanks for your concern. You or your gang not ruling USA. So, there is better civil rights here. //
அப்படியே நான் உங்களுக்கு சொல்ல நினைத்ததே, அங்கே சிவில் ரைட்ஸ் அதிகம் அதனால் தான் அப்படி சொன்னேன், சாதிவெறித்திமிரோடு பேசினால் இந்தியா மாதிரி விட்டுடமாட்டாங்க உள்ள வச்சிடுவாங்கன்னு.... அடடே சாதிவெறித்திமிரோடு நான் எங்கே பேசினேன்னு ஆரம்பிச்சா விட்டதுசிகப்பு பதிவு உங்க பதிவுனு சுட்டிக்காகலாம் தேடமுடியாது, கேஸ் எதுனா போட்டிங்கனா அப்போ தேடித்தரேன்.

வாங்க லக்கிமேன்....

//கானமயிலாட கண்ட வான்கோழி மேடையேறி கேவலப்பட்ட கதை தான் நினைவுக்கு வருகிறது.//
வச்சிக்கலாம் அப்படிக்கூட , மயில் கறி பிரியாணி நன்றாக இருக்குமாமே? இதுவரைக்கும் சாப்பிட்டது தான் இல்லை.... பிகேஎஸ் இந்த விசயத்துல என்னோட குரு னு கூட சொல்லலாம், இங்கே தான் பிகேஎஸ் எழுத்திலிருந்து கற்றுக்கொண்டேன் ஏகலைவனைப்போல, அதுக்காக குருதட்சணையா கட்டைவிரலை கேட்டுடாதிங்கப்பு, நானொன்று அந்த கால இனாவானா ஏகலைவன் அல்ல, அங்கே அப்படி என்ன எழுதியிருந்தாரா? கீழே போடுறேன் படிங்க....
//ஹலோ விசிதா மேடமா? வாங்க மேடம் வாங்க! உங்களைப் பார்த்தால் அண்ணன் ரவி ஸ்ரீனிவாஸைப் பார்த்த சந்தோஷம் வருகிறது. உங்களை மட்டுமல்ல, இணையப் பத்திரிகைகளில் ராதா ராமசாமி எழுதுவதைப் பார்த்தாலும் அண்ணன் ரவி ஸ்ரீனிவாஸைப் பார்க்கிற சந்தோஷம் வருகிறது. வலைப்பதிவுக்கு விசிதா, இணையப் பத்திரிகைகளுக்கு ராதா ராமசாமி என்று ஏரியா பிரித்துக் கொண்டு, அண்ணன் ரவி ஸ்ரீனிவாஸை நினைவுபடுத்தி வருவதற்கு நன்றிதானே சொல்ல வேண்டும். கொஞ்சம் பொறுங்க. நீங்களும் ராதா ராமசாமியும் அண்ணன் ரவி ஸ்ரீனிவாஸ் மாதிரி அறிவுபூர்வமாக எழுதுகிறீர்கள் என்று சொல்ல வந்தேன். வேறு மாதிரி கோக்குமாக்கா நினைச்சுக்க்காதீங்க.

விசிதா மேடம், அதப் பாருங்க. அசோகமித்திரன் பிரச்னை என்னவென்று நான் நினைக்கிறேன் என்றால் - பெண்கள் பெயரில் ஐ.டி. கிரியேட் செய்து கொண்டு, தனக்குத் தானே சப்போர்ட்டிங் ஆர்க்யூமெண்ட்ஸ் வைக்கவும், அடுத்தவரைத் திட்டி எழுதவும் கற்றுக் கொள்ளாததுதான் என்று நினைக்கிறேன். ஒருவேளை, அப்படி இன்னொரு பெயரில் - அதுவும் பெண் பெயரில் எழுதினால் எல்லாரும் நம்பி விடுவார்களோ என்றோ, கடுமையான எதிர் விமர்சனம் இருக்காது என்றோ நம்பிக்கைகளில் - அப்படிப்பட்ட ஒரு ஐ.டி.யை உருவாக்கிக் கொண்டு, தன் வாதத்துக்குத் தானே சப்போர்ட் சேர்க்கிற Pathetic நிலைமைக்கு இன்னும் அசோகமித்திரன் வராதது கண்டு உங்களைப் போன்ற மேடம்களுக்கு பிரச்னையாகத்தான் இருக்கும்.
//

----------
லக்கிமேன் எப்படி மயிலாட்டம் சூப்பரா?

10:20 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://aalamaram.blogspot.com/2007/02/blog-post_07.html

பார்ப்பனியத்தின் வழக்கமான பார்ப்பனியத்தை எதிர்ப்பவர்களை உள்வாங்கும் போக்கு அய்யன்காளி அவர்கள் மீதும் நடத்த ஆர்.எஸ்.எஸ். முயல்வது தெரிகின்றது, இந்த உள்ளிழுக்கும் போக்கை உடைக்கவும் இந்த கட்டுரை தேவைப்படுகிறது.

நன்றி

10:36 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://kaiman-alavu.blogspot.com/2007/01/blog-post.html

//விமரிசனம் கலாம் அவர்களைப் பற்றியதல்ல, புனிதபிம்பத் தொழிற்சாலை அதிபர்களைப் பற்றியது. நீங்கள் எழுதியதையே சற்று மாற்றி யோசித்துப் பாருங்கள். கலாம் இப்போது இருப்பது போலவே ஒருத் திறமையான அறிவியலாளராக இருந்து, அதே நேரத்தில் மாமிசம் உண்ணுபவராகவும், கீதைப் படிக்காதவராகவும், மடாதிபதிகளிடம் தேடிச் சென்று ஆசி பெறாதவராகவும் இருந்திருந்தால் ஆர்.எஸ்.எஸ் அவரை ஆதரித்திருக்குமா? ஊடகங்கள் அவரை விமரிசனங்களுக்கு அப்பாற்பட்ட மாமனிதராக ஆக்கியிருக்குமா?
//
நீண்ட நாட்களாக கலாம் பற்றிய எனது எண்ணம் இது சட்டென்று இங்கே பார்த்தவுடன் கவர்ந்துவிட்டது, உங்கள் பிற பதிவுகளும் பார்த்தேன், மிக நன்றாக வந்துள்ளது

நன்றி

10:42 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://arvindneela.blogspot.com/2007/02/blog-post_11.html

//இந்து சமுதாய சிற்பியுமான அய்யன் காளி//
இந்து சமுதாய சிற்பியா? புத்தரையும் வள்ளலாரையும் உள்ளிழுத்தது போல அய்யன்காளியையும் உள்ளிழுக்கும் வேலையா?

9:05 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://balabharathi.blogspot.com/2007/02/blog-post_13.html

ஒரு ஒரு முறை கடலூர் மத்திய சிறைச்சாலைக்கு செல்லும்போதும் பாரதி இருந்த அறையை நூலகமாக மாற்றி வைத்துள்ளதை சிறிது நேரம் நின்று பார்த்து வருவேன்....

ஹி ஹி கடலூர் மத்திய சிறைச்சாலையில் என் மாமா ஜெயிலராக இருந்தார், அவரை பார்க்கப்போகும்போது ஒவ்வொரு முறையும் பாரதியின் அறையை பார்த்து வருவேன்.

7:59 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://jataayu.blogspot.com/2007/02/blog-post_117111415536219618.html
http://karuppupaiyan.blogspot.com/2007/02/blog-post_13.html

ஒரு சில நேரங்களில் இராம.கி. அய்யா வருத்தம் தொனிக்க அவருடைய பதிவில் சில அனானி பின்னூட்டங்களுக்கு பதில் அளிக்கும் போது இவரையும் இப்படி பேசுகிறார்களே யாராக இருக்கும் என்று நினைத்தேன், தமிழ் வளர்ச்சிக்கு பாடுபடுபவரும், தமிழ் சொற்களின் வேர் சொற்களை ஆய்வு செய்தளிப்பவருமாக தற்போதைய நிலையில் இம்மாதிரியான விடயங்களில் ஆர்வமோடு செயல்படும் அய்யா அவர்கள் கிடைக்கதற்கரிய ஒரு பொக்கிசமாக திகழ்பவர் இவரை விமர்சிப்பவர்கள் பாவம் ஏதோ எரிச்சலில் செயல்படுகிறார்கள் என்பது நன்றாகவே தெரிகின்றது.

செத்து போன வட மொழிக்கு உயிர் கொடுக்க இவர்களும் படும் பாட்டை நினைத்தால் சிரிப்பு தன் வருகின்றது, இந்த இலட்சனத்தில் கணிணி, கிரிப்டோகிராபிக்கு சிறந்த மொழி சமஸ்கிரதமாம், கொடுமைடா சாமி கணிணிக்கு புரிவதெல்லாம் 1 மற்றும் 0 தான்... சமஸ்கிரதத்தில் என்ன MD5 லாஜிக்கோ அல்லது RSA லாஜிக்கோவா இருக்கின்றது?

5:47 PM  
Blogger குழலி / Kuzhali said...

http://aalamaram.blogspot.com/2007/02/blog-post_14.html

திரு, இதுதான் நீங்கள் சரியான பாதையில் செல்கிறீர்கள் என்பதற்கு சான்று, அய்யா வீரமணி அவர்கள் எங்களிடம் பகிர்ந்து கொண்டதை உங்களுக்கும் சொல்கிறேன், எவ்வளவுக்கெவ்வளவு கேவலமான வார்த்தைகளில் அவருக்கு கடிதங்கள் வருகின்றதோ, எவ்வளவுக்கெவ்வளவு அசிங்கமான வார்த்தைகளில் அவர்கள் மீது தாக்குதல் நடைபெறுகிறதோ அவ்வளவுக்கவ்வளவு அவர்கள் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறார் என்று அர்த்தமாம், அது போல உங்கள் எழுத்து அவர்களை பதட்டப்பட வைக்கிறது, உங்கள் எழுத்து அவர்களை நிலைகுலைய வைக்கிறது இவர்களையெல்லாம் புறம்தள்ளி நீங்கள் உங்கள் பணியை தொடருங்கள், இவைகள் எல்லாம் அலைக்கழிப்புகளே, உங்களின் மற்றைய எழுத்திற்கு செலவு செய்ய வேண்டிய நேரத்தை இந்த பதிவிற்கு செலவு செய்ய வைத்திருக்கிறார்கள், இது அவர்களுக்கு இலாபமான ஒன்று, ஆனால் உங்களுக்கு நேர இழப்பு மேலும் இந்த நேரத்தில் நீங்கள் மற்றைய எழுத்துகளில் செலவிடக்கூடாது என்பதற்கான சூழ்ச்சி, எனவே அவர்களை புறந்தள்ளி நீங்கள் தொடருங்கள், அவர்களின் பதட்டமும், எரிச்சலும் பெருகட்டும்

நன்றி

8:38 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://jataayu.blogspot.com/2007/02/blog-post_117111415536219618.html

//// கணிணிக்கு புரிவதெல்லாம் 1 மற்றும் 0 தான்... சமஸ்கிரதத்தில் என்ன MD5 லாஜிக்கோ அல்லது RSA லாஜிக்கோவா இருக்கின்றது? //

குழலி, சும்மா கணினியில் 2-3 வித்தைகள் கற்று வைத்துக் கொண்டு இப்படி ஜல்லியடிப்பதற்கும் , தீவிர ஆராய்ச்சிக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.
//
நன்றி ஜடாயு, safescryptக்காக கிரிப்டோகிராபியில் நான் செய்த ப்ராஜெக்ட்டை என் CVயிலிருந்து தூக்கிவிடலாமா என யோசித்துக்கொண்டிருக்கின்றேன், அதற்கு பதில் சமஸ்கிரதம் தெரிந்து கொண்டு அதை போட்டால் என்னை கிரிப்டோகிராபியில் வேலை செய்ய கூப்பிடுவார்களா என்பதையும் தாங்கள் தெரிவித்தால் தன்யனாவேன்.

9:44 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://sugunadiwakar.blogspot.com/2007/02/blog-post_15.html

//ஒன்றைப் பட்டறிவுடன் உணர்ந்து எழுதுவதொன்று; மாதிரியாகப் பாவனை செய்து எழுதுவதொன்று.//

//கலகக்காரனாக இயல்பிலே அமைந்து வாழ்வதற்கும் கலகக்காரன்_போல்மை செய்வதற்குமான வேறுபாட்டினைக் குறித்த உங்கள் கருத்தினை அறிய விருப்பமேற்படுவதுண்டு.
//
பெயரிலி நிறைய முறை யோசித்திருக்கிறேன், இதையே சற்று மாற்றி தலித் பற்றி எழுதுவதற்கு தலித்தாக பிறந்திருந்தால் மட்டுமே முடியும் என்று கூட யோசித்திருக்கிறேன், தலித் பற்றி தலித் அல்லாதவர்கள் எழுதக்கூடாதா? அப்படியெழுதினால் அது போலித்தன்மையானதா என்றெல்லாம் குழம்பியிருக்கிறேன், உண்மைதான் தலித் பற்றி தலித் எழுதுவதற்கும் பிறர் எழுதுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது, பசியோடிருப்பவன் அதை சொல்வதற்கும் பசியோடிருப்பவனை பார்த்து அதை பிறர் சொல்வதற்கும் உள்ள வித்தியாசம் தான் தலித் எழுதுவதற்கும் தலித்தை பற்றி பிறர் எழுதுவதற்கும் உள்ள வித்தியாசம், ஆனால் அதே சமயத்தில் தலித்தை பற்றி பிறர் எழுதுவதற்கு தகுதியில்லையென்றோ தவறென்றோ அது போலித்தனமானது என்றும் சொல்லிவிடமுடியாது, இரண்டிற்கும் வித்தியாசம் உண்டு ஆனால் அதற்காக போலித்தனம் என்று கூற இயலாது.

பசியைப்பற்றியும், வன்கொடுமைகளைப்பற்றியும் தமக்கு ஏற்படாமல் நிலபுலன்கள் இருந்தும் பணக்கார வளமையான வாழ்க்கை எதிரில் இருந்தும் புரட்சியாளர்களாக வாழ்ந்து விளிம்புநிலை மக்களுக்காக போராடியவர்களை எங்கெங்கோவெல்லாம் தேடத்தேவையில்லை தமிழகத்திலேயே புலவர் கலியபெருமாள், தமிழரசன், வாட்டாக்குடி இரணியன் என்று ஒரு பெரிய பட்டியலே உண்டு, கடைசியாக வீரப்பனோடு சேர்ந்து கொண்டு ராஜ்குமார் கடத்தல் நடத்திய மாறன் புரட்சி இயக்கங்களில் சேருவதற்கான எந்த வறுமை சூழலோ, போர் சூழலோ இல்லாத ஒரு கிராமத்து நிலவுடமையாளரின் கடைசி செல்ல மகன் தான், இவர்களெல்லாம் புரட்சியாளர்கள் எனலாமா? அல்லது புரட்சியாளர்களாக பாவித்துக்கொண்டவர்கள் எனலாமா?

மற்றபடி நீங்கள் கேட்பதற்கும் நான் சொன்னதற்கும் தொடர்பு இருக்கின்றதா எனத்தெரியவில்லை, ஏனெனில் வழக்கம் போல உங்கள் பின்னூட்டம் எனக்கு அரைகுறையாக மட்டுமே புரிந்தது.

9:39 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://sugunadiwakar.blogspot.com/2007/02/blog-post_16.html

//அடிப்படையிலேயே நாமிருவரும்
வேறானவர்கள்.
உனது எதிர்பார்ப்பு
உன் தேசத்திற்கான விடுதலை.
எனக்கோ தேசத்திடமிருந்து விடுதலை.
//
உன் விடுதலையாவது
என்றாவதொருநாள் கிடைக்கும்
என்ற நம்பிக்கை

என் விடுதலை மீது
எனக்கே இல்லை
நம்பிக்கை

9:45 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://holyox.blogspot.com/2007/02/239_16.html

//முகமதிய மற்றும் பாமக கொள்கைகள் பல நேரங்களில் ஒரு புள்ளியில் சந்திக்க வாய்ப்புகள் உண்டு. //
அண்ணார் ஓகை அவர்கள் முகமதிய கொள்கைகளும் பாமக கொள்கைகளும் பலநேரங்களில் ஒரு புள்ளியில் சந்திக்க வாய்ப்புகள் உண்டு என்றூ இயம்பியிருக்கின்றீரே? எங்கெங்கே எந்தெந்த புள்ளிகளில் என்றால் தன்யனாவேன்.

//ஆனால் இந்துத்வவாதிகள் காதல் மணங்களுக்கும் கலப்பு திருமணங்களுக்கும் எதிரானவர்கள் அல்ல என்பதே என் நம்பிக்கை.
//
இது தான் தாங்கவே முடியலை சாமி... பாமக கலப்பு திருமணத்திற்கு எதிர்ப்புனு எங்கெங்கெல்லாம் சொன்னார்கள்? இந்துத்துவா வாதிகளின் கலப்பு திருமணம் என்பது வெவ்வேறு சாதிகளில் இந்துக்களுக்குள் மட்டும் செய்துகொள்வதா? முசுலீமும் இந்துவும் செய்துகொள்வது இந்துத்துவாவாதிகளுக்கு கலப்புத்திருமணம் இல்லையா? அதுபற்றி என்ன சொல்றாங்க இந்துத்துவா வாதிங்க?

//சாதிவிட்டு சாதி மாறிய காதல்கள் பிராமணஸ்திரிகளுக்கும், சூத்ர புத்ரர்களுக்கும் மட்டுமல்ல
க்ஷத்திரிய ஸ்த்ரிகள்-சூத்ர புத்ரர்கள்
வைசிய ஸ்திரிகள்-சூத்ர புத்ரர்கள்
மேலும்...
சூத்ர ஸ்திரிகள்-பிராமண, க்ஷத்திரிய, வைஸிய புத்ரர்கள்.
இப்படி காதல்தேவன் கட்டுகளை உடைத்து கல்யாணங்களை கள்ளத்தனமாக பண்ணிக் கொண்டிருந்தான்.
காதல் தேவனும், காமதேனும் கூட்டணி வைத்துஇஷ்டத்துக்கு திருவிளையாடல் நடத்திக் கொண்டிருந்தால் மநு நினைத்த stable society அமையுமா? அமையாதே.
இதுவும் தெரிந்திருந்தது மநுவுக்கு. அதனால்தான் இந்த பிரச்சினைக்காக மாற்றுச் சட்டமும் இயற்றியிருக்கிறார்.
என்ன மாற்றுச் சட்டம்?
முறைகேடான சாஸ்திரங்களை சாகடிக்கக்கூடிய வகையில் இதுபோல கலப்பு மணம் செய்து கொண்டவர்களுக்கு இரண்டு அளவுகோல் வைத்துப் பார்த்தார். மநு ஒன்று.. அனுலோம சங்கரம்... இரண்டு... ப்ரதிலோம சங்கரம் அனுலோம... பிரதிலோம என்றால் என்ன என தெரிந்து கொள்வதற்கு முன் ‘சங்கரம்’ என்பதற்கு இந்த இடத்தில் என்ன பொருள் என்று தெரிந்து கொள்ளவேண்டும்.
முறைகேடான.. சபிக்கப் படக்கூடிய உறவுகள் உண்டாகுமானால் அந்த சாஸ்திர விரோத சம்பந்தத்துக்குப் பெயர்தான் ‘சங்கரம்’ என்பதற்கு இந்த இடத்தில் என்ன பொருள் என்று தெரிந்து கொள்ளவேண்டும்.
முறைகேடான... சபிக்கப்படக்கூடிய உறவுகள் உண்டாகுமானால் அந்த சாஸ்திர விரோத சம்பந்தத்துக்குப் பெயர்தான் ‘சங்கரம்’.
சரி அனுலோம சங்கரம் என்றால்? இந்த உறவில்.. ஆண் மேல்ஜாதிக்காரனாக இருந்தால், இதற்கு பெயர் அனுலோம சங்கரம்.
ஆனால், இவர்களை மநு சண்டாளர்களாக பார்ப்பதில்லை. ஏனென்றால் மேல் ஜாதி ஆண் அல்லவா? கீழ் ஜாதிப்பெண்ணை எடுத்துக் கொண்டிருக்கிறான்.
நம் இனத்து ஆண்... பிற இன பெண்களை பார்ப்பது, பறிப்பது, நுகர்வது, உறவுகள், உண்டாகுமானால் அந்த சாஸ்திர விரோத சம்பந்தத்துக்குப் பெயர்தான் பொதுவாய் ‘சங்கரம்’.
இக்கட்டுரையின் முற்பகுதியிலேயே சொன்னது போல எல்லா ஜாதிக் காரர்களுக்கும் அந்த ப்ரியம் பொதுவானதாக இருந்தது.
இந்த சம்மந்தத்தில் ஆண் மேல்ஜாதிக் காரனாகவும் பெண் கீழ்ஜாதிக்காரியாகவும் இருந்தால் இதற்கு பெயர் அனுலோம ‘சங்கரம்’.
உலகத்துக்கே அமைதியைத் தருவது பெண்களின் அழகுதான்... என்றது வேதம். மநுவோ... கீழ்ஜாதிப் பெண்கள் மேல் ஜாதி ஆண்களைக் கவர்ந்தபோது மட்டும் அவர்களை கண்டுகொள்ளவில்லை. என்ன செய்தாலும் அது பாபம் அல்ல என்கிறது மநு.
இவர்களை அடித்துத் துரத்தி கொடுமைகள் செய்யாமல் தங்கள் உடனேயே தங்க வைத்துக் கொள்கிறது மநு சாஸ்திரம்.
அடுத்து சொல்லப்போகும் ‘ப்ரதிலோம சங்கரம்’ பற்றி நீங்கள் யூகித்திருக்கலாம். அதாவது....
மேல்ஜாதிப் பெண்களை கீழ்ஜாதி ஆண்கள் கவர்ந்தது, பறித்து நுகர்ந்து சென்றால் மநுவின் பார்வையில் இது பிரதிலோம சங்கரம்.
அடேய்.. அதெப்படி நம் இனத்து பெண்ணை ஒரு கீழ்சாதிப் பயல் கவர்ந்து செல்லலாம்?... இவளுக்கு எங்கே போயிற்று புத்தி? ஊரைவிட்டே பகிஷ்காரம் பண்ணுங்கள் நாம் வாழும் தெருவில் அவர்களின் பாபத்தடங்கள் படக்கூடாது அவர்களின் சுவாசக்காற்று நமது தெருக்காற்றை உரசக்கூடாது.
அவர்களும், அவர்களைத் தொடர்ந்துவரும் சந்ததிகள் அத்தனைபேரும் சண்டாளர்கள்தான் சட்டம் இயற்றி தண்டனை விதித்தது மநு.
இதன் காரணமாக பிரதிலோம சங்கர கூட்டம் ஊரைவிட்டு விரட்டப்பட்டது. இன்று வரை அவர்கள் ஊரோரம் குடியிருக்கும் காரணம் புரிகிறதா?
ஆனால்... ‘அனுலோம சங்கர’ கூட்டத்துக்கு ஊரிலேயே இடம் கொடுத்து தேர் ஓட்டுங்கள் என ஆணையிட்டது மநு மநுவின் ‘சண்டாளன்’ என்ற பதத்துக்கு... சமஸ்கிருத மொழியியல் பேரறிஞரான பாணினி கூட அர்த்தம் தேடுகிறேன் எனச் சொல்லியிருக்கிறார்.
நாம் மேலும் வரலாற்றைத் தேடுவோம்.
//
இது தாத்தாச்சாரி எழுதியது, முதலில் இந்த வேத, மனு குப்பைகளை எரித்துவிட்டார்களா இந்துத்துவாவாதிகள்? இதை எரித்துவிட்டார்கள் என்றால் இந்துத்துவாவாதிகள் கலப்புமணம் பற்றி நீங்கள் சொல்வதை ஏற்கிறேன், அப்புறம் வேதக்குப்பைகளை எல்லாம் எரித்துவிட்டால் அப்புறம் எங்கேயிருக்கும் இந்து மதம்? அப்புறம் யாரை அழைப்பது இந்துத்துவா ஆட்கள் என்று....

11:46 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://aalamaram.blogspot.com/2007/02/blog-post_16.html

//ravi srinivas said...
Before writing about history and doctoring it is better that you learn some facts and try not to give an onse-sided picture.Why blame Hinduism for all everything.
Was it not a fact that Muslims were also against Buddhism.What happened in Iran.How is that Jews and Parsis found a safe haven in
India.You are yet another 'secular'
fellow with a myopic perspective.//
ரவி ஒருவேளை திரு ஈரானில் பிறந்திருந்தால் இந்த கட்டுரை இசுலாமிய மதத்தை சாடி இருக்கும், அடிக்கடி உங்களைப்போன்ற ஆட்களால் கேட்கப்படும் கேள்வி இது, இந்தியாவிலே, தமிழகத்திலே எது அடக்குமுறை செய்கிறதோ அதை எதிர்த்துதானே பேச வேண்டிய தேவை இருக்கிறது....

12:14 PM  
Blogger குழலி / Kuzhali said...

http://holyox.blogspot.com/2007/02/239_16.html

//இந்துத்வவாதிகளைப் பற்றி தெரிவித்த நம்பிக்கையில் பாமக எங்கே வந்தார்கள்? குழலி, இது பச்சையான திசை திருப்பும் முயற்சி//

ஓகை நீங்கள் எழுதியிருப்பதில் இருக்கும் ஆனால் என்பதன் அர்த்தம் என்ன?

//காதலர் தின எதிர்ப்பை காதலுக்கான எதிர்ப்பாக என்னால் கொள்ள முடியவில்லை. சில காதலர் தினக் கொண்டாட்டங்கள் காதலை கொச்சைப் படுத்துவதாக எனக்குத் தொன்றுகிறது.

முகமதிய மற்றும் பாமக கொள்கைகள் பல நேரங்களில் ஒரு புள்ளியில் சந்திக்க வாய்ப்புகள் உண்டு. ஆனால் இந்துத்வவாதிகள் காதல் மணங்களுக்கும் கலப்பு திருமணங்களுக்கும் எதிரானவர்கள் அல்ல என்பதே என் நம்பிக்கை.//

சொல்லவந்தது என்னவென்று படிப்பவர்களுக்கு போய் சேரும், வேண்டுமானால் வாதத்திற்கு சொல்லலாம் ஆகா நானெங்கே அப்படி சொன்னேன் இப்படி சொன்னேன் என்று, அதன் பிறகு நானெங்கே இப்படி சொன்னேன் என்றால் வழித்துக்கொண்டு சிரிக்கத்தான் தோன்றும்.

//நான் அறிந்த வரையில் இந்து மத எதிர்ப்பில் குறிப்பாக இந்துமத இறை உணர்வின் எதிர்ப்பில் பாமகவும் சில முகமதியர்களும் ஒரு புள்ளியில் இருப்பதாக உணர்கிறேன். மேலும் பெரியார் ஆதரவு நிலையிலும் இதைக் காணலாம்.
//
நிஜமாகவே நீங்கள் இந்த விடயத்தை தான் முகமதிய மற்றும் பாமக கொள்கைகள் ஒரு புள்ளியில் சந்திக்கிறன என்று கூறினால் நான் நம்பித்தானே ஆக வேண்டும்.

//பாமக கலப்புத் திருமணங்களுக்கு ஆதரவாக எடுத்த நிலைப்பாடுகளை நான் அறிந்திருக்கவில்லை. அறியத் தர வேண்டுகிறேன்.

வேறு எந்தெந்த கட்சிகளெல்லாம் கலப்புத் திருமணங்களுக்கு ஆதரவாக எடுத்த நிலைப்பாடுகளை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்? பாமக கலப்பு திருமணத்திற்கு எதிராக நிலைப்பாடு எடுத்தார்கள் என்று எங்கேயாவது சொல்லியிருக்கிறார்களா? அறியத்தந்தால் நானே கட்சிக்காரர்களிடம் கேட்பேனல்லவா? ஆர்.எஸ்.எஸ். நிலைப்பாடு இந்துத்துவா பற்றி உங்களுக்கு தெரியவந்தது எப்படி? ஒரு வேளை அரவிந்தன் நீலகண்டன் மட்டுமே முழு ஆர்.எஸ்.எஸ். என்று நினைக்கிறீர்களா? கலப்பு மணத்திற்கு எதிராக ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் பேசிய பேச்சு ஏற்கனவே ஆங்கிலப்பத்திரிக்கையில் படித்திருக்கிறேன், அதன் சுட்டிகளை தேடி எடுத்து தருகிறேன், சமீபத்தில் கூட அந்த சுட்டிகளை ஏதோ ஒரு பதிவில் பின்னூட்டத்தில் தந்திருந்தார்கள், சாதிய அமைப்பை உடைக்கக்கூடாது என்பது மாதிரி ஆர்.எஸ்.எஸ். தலைவர் பேசியிருப்பார் சாதிய அமைப்பை உடைக்கக்கூடாது என்றால் கலப்பு திருமணம் எப்படி சாத்தியமாகும்.

//மற்ற மதங்களில் கலப்புத் திருமணங்கள் மாற்று மதத்து மணபெண்ணையோ ஆணையோ மதம் மாறச் சொல்லுவார்கள். இது அவர்களுக்கு மதம் மாற்றுவதற்கான ஒரு வாய்ப்பு. இந்து மதத்தில் இப்படி ஒரு நிலை இருக்கிறதா?//

அண்ணார் ஓகை அவர்களே மற்ற மதத்தை பற்றி நமக்கெதற்கு? நேரடியான பதில் தாருங்கள் ...இந்துத்துவா வாதிகளின் கலப்பு திருமணம் என்பது வெவ்வேறு சாதிகளில் இந்துக்களுக்குள் மட்டும் செய்துகொள்வதா? முசுலீமும் இந்துவும் செய்துகொள்வது இந்துத்துவாவாதிகளுக்கு கலப்புத்திருமணம் இல்லையா? அதுபற்றி என்ன சொல்றாங்க இந்துத்துவா வாதிங்க?

//இன்றைய இந்துமதத்தின் பெரும்பாலோர் அறியாத, தன் தகுதியினாலேயே வழக்கொழிந்துவிட்ட ஒரு தர்மத்தின் தீமைகளை விளக்கு விளக்கு என்று விளக்கித் தள்ளுவது புரிந்து கொள்ளக் கூடியதுதான்.
//
வழக்கொழிந்துவிட்டதின் பின் இந்து மதம் ஏது? வேத குப்பைகளும் மனுவும் தானே இந்து மதம், அவைகளே இல்லையென்றால் இந்து மதம் இன்னமும் இருக்கிறதா?

//இந்து மதத்தில் இருக்கும் ஒரு ஜாதியை தாங்கிப் பிடித்துக் கொண்டு அதையே அரசியல் வாழ்க்கையாகக் கொண்டிருக்கும் ஒரு இயக்கத்தை ஆதரிப்பவருக்கு மனுதர்மத்தைன் நன்மை தீமைகளப் பற்றி அதிகமாகத் தெரிந்திருப்பது அதிசயமில்லை
//
எல்லோரும் கடைசியாக என் மீது பயன்படுத்தும் ஆயுதமிது, இதோ நீங்களும் பயன்படுத்தியுள்ளீர்கள், எத்தனை முறை விளக்கு விளக்குனு விளக்கினாலும் பேச முடியாத சந்தர்ப்பங்களில் என் மீது இந்த ஆயுதத்தை பலரும் பயன்படுத்துவது தானே, ஓகை மட்டுமென்ன விதிவிலக்கா?

11:43 PM  
Blogger குழலி / Kuzhali said...

http://haisathaq.blogspot.com/2007/02/blog-post_14.html

//அது அவர்களுடைய மனதில் கூடுதல் அழுத்தத்தைத் தருகிறதோ என்ற எண்ணத்தைப் புறந்தள்ள முடியவில்லை
//
உண்மைதான், சாகரன் மரணச்செய்தி கேள்விப்பட்டதினத்திலிருந்து இது என் மனதில் ஓடிக்கொண்டே இருக்கின்றது, ஆமென்று ஆமோதிக்கவும் இயலவில்லை, இல்லை என்று புறந்தள்ளவும் இயலவில்லை...

நன்றி

9:34 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://holyox.blogspot.com/2007/02/241.html

செல்வனிடமிருந்து வந்துள்ள வழக்கமான பதிவு, நான் வழக்கமானன்னு சொன்னது ஹி ஹி அதேதான் :-)

திராவிட தமிழர்கள் வலைதளத்திலேயே சில பதிவுகள் இது தொடர்பாக உள்ளன, கொஞ்சம் படித்தால் புரிந்து கொள்ளமுடியும்... இது தொடர்பாக மேலும் சில பதிவுகளும் போடத்தயாராகவே உள்ளோம்.... திராவிட தமிழர்கள் வலைப்பதிவில் எங்களைப்பற்றி என்பதில் என்ன எழுதியிருக்கிறோம் என்று பார்த்த பின்னாவது கொஞ்சம் யோசித்து எழுதியிருக்கலாம் அதை கீழே அளித்துள்ளேன்
//aboutதமிழ் மொழியின் மீதுள்ள பற்றும் தமிழ் சமுதாயத்தின் மீதுள்ள அக்கறையும் எங்களை இணைத்துள்ளது//
சிலம்பம் ஆடி முடிங்க, வருகிறோம்.... அதற்கு முன்பு அதிகாரப்பூர்வமாக இருக்கும் இந்திய தேசியத்துல இருக்குற கர்நாடகாலருந்தும் கேரளாவிலிருந்தும் தண்ணி வாங்கி தரசொல்லுங்க இந்திய தேசபிமாணிகளை.....

சரி திராவிடம் பற்றி சுப.வீ. அவர்கள் என்ன சொல்கிறாரென்றால்

திராவிடம் என்ற சொல் இனி வேண்டாம் என்று கருதுகிறீர்களா?

பொதுவாக என்னைப் பொறுத்தவரை நான் அரசியல் தளங்களில் தமிழன் என்ற சொல்லை கூடுதலாகவும் சமூக நீதி தளங்களில் திராவிடன் என்ற சொல்லை கூடுதலாகவும் பயன்படுத்துகிறேன். திராவிடம் என்ற சொல் ஆந்திரம், கேரளம், கர்நாடகம், மக்களை உள்ளடக்கியதாக நான் கருதவில்லை. அவர்கள் யாரும் தங்களை திராவிடன் என்று அழைத்துக் கொள்ளவில்லை. திராவிடன் என்ற சொல்லே பார்ப்பனீய கருத்து நிலைக்கு எதிரான ஒரு போர்க் குணம் கொண்ட சொல்லாக இருக்கிறது. திராவிடம் தான் இந்த மண்ணில் பார்ப்பனீயத்தை எதிர்த்து இந்த நூற்றாண்டில் எழுந்த முதல் குரல் என்பது என் கருத்து.

சித்தர்களின் காலத்திலிருந்து அந்தப் பார்ப்பனீயர் எதிர்ப்பு இருக்கிறது. சங்க இலக்கியத்தைத் தேடிப் பார்த்தால் கூட இருக்கிறது. அது ஒரு இயக்கமாகக் கட்டமைத்த பெருமை பெரியாருக்கு உண்டு. வள்ளலாரிடமும் அடிகளாரிடமும் பார்ப்பன எதிர்ப்பு இருந்த போதிலும் கூட அந்த எதிர்ப்பை ஒருங்கிணைத்து கட்டமைத்த பெருமை திராவிடத்திற்கு உண்டு. அதற்கு முன்பாகவே திராவிடம் என்ற சொல் உருவாகி விட்டாலும் கால்டுவெல் காலத்திலிருந்து ஒரு பாரம்பரியமான வரலாற்று தொடர்ச்சியிருந்தாலும் பார்ப்பனீய எதிர்ப்பை கட்டமைத்த பெருமை பெரியாருக்கு உண்டு. எனவே திராவிடம் என்ற சொல் பார்ப்பனீய எதிர்ப்பு நிலைச் சொல்லாகவே பயன்படுத்த வேண்டும்.

மேலும் காண்க.....

http://dravidatamils.blogspot.com/2006/08/blog-post_10.html
http://dravidatamils.blogspot.com/2007/01/blog-post_25.html
http://dravidatamils.blogspot.com/2007/01/blog-post_22.html

செல்வன் எதற்கும் கொஞ்சம் ஹோம் ஒர்க் செய்து எழுதலாம்... தலாம்... லாம்... ம்....

2:03 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://blog.thamizmanam.com/archives/85

வலைப்பதிவுகளின் சிறப்பே அதன் சுதந்திரமான வெளிதான், பதிவர்களின் பொறுப்பற்ற சில செயல்களும் அதை கட்டுப்படுத்துகிறேன் என்று கிளம்புவதும் வலைப்பதிவுகளையும் தமிழ்மணத்திலும் கொஞ்சம் கொஞ்சமாக தற்போதைய வெகுசன ஊடகத்தில் உள்ள எழுதப்படாத கட்டுப்பாடுகளைப்போல இங்கேயும் கொண்டு வந்துவிடும் நிலை உருவாகிவிடும் என்று அஞ்சுகிறேன். எது கும்மி பதிவு, எது ஜல்லிபதிவு, எது கருத்துபதிவு, எது சரக்கு பதிவு என்பதை எப்படியாக தீர்மாணிப்பது என்பது அவரவர்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை பொறுத்தது, எனக்கு நல்ல பதிவாக தோன்றுவது வேறு சிலருக்கு ஜல்லி பதிவாகவும், மற்ற சிலருக்கு இந்த ஆளுக்கு வேற வேலையே இல்லை இதையே எப்போ பார்த்தாலும் எழுதுகிறான் என்றும் தோன்றும், மற்றவர்கள் நல்ல பதிவு என்று நினைப்பது சில சமயங்களில் எனக்கு கும்மி, ஜல்லி இன்ன பிற பதிவுகளாக தோன்றும், எல்லாம் இங்கே கிடைக்கும் என்பதுதான் வலைப்பதிவு உலகின் சிறப்பம்சமே, வெகுசன ஊடகத்தில் இல்லாத ஒன்று வலைப்பதிவுகள் என்ற மாற்று ஊடகத்தில் கிடைப்பது இது தான், எனவே அதில் எதை தேர்ந்தெடுத்து படிப்பது என்பதை வாசகர்கள் முடிவு செய்துகொள்ளட்டும்.

//சில பதிவுகளில் பின்னூட்டங்கள், வெறும் விளையாட்டாகவும் வேடிக்கையாகவும் சில சந்தர்ப்பக்களிலே சச்சரவுகளை உருவாக்கும் நோக்கத்தோடும் அனுமதிக்கப்படுவதால், பின்னூட்டங்களைத் திரட்டும் வசதி அதன் தேவைக்கும் நோக்கத்துக்கும் மாறாக, முறையின்றிப் பயன்படுத்தப்படுகின்றது என்று தமிழ்மணம் நிர்வாகத்திற்குத் தொடர்ந்து முறையீடுகள் வருகின்றன.//
இதில் உண்மைகள் இருந்தாலும் இத்தனை சீரியசாக எடுத்துக்கொண்டு செய்ய வேண்டியதிருக்கின்றதா?? ஒரு நாளைக்கு வெளிவரும் சராசரியான 150 பதிவுகளில் எத்தனை பதிவுகளில் இப்படியாக இருக்கின்றது? ஒன்றிரண்டு கூடத்தேறாது... அந்த ஓரிரு பதிவுகளுக்காக இப்படியான பின்னூட்ட உயரெல்லைகள் என்றெல்லாம் இப்படியான கட்டுப்பாடுகள் தேவையா என்பதை யோசிக்கலாம், அப்படியே தமிழ்மணத்தின் பின்னூட்ட பக்கத்தில் கும்மி பதிவுகள் ஆக்கிரமிக்கிறது என்றெல்லாம் சொல்லப்படுகின்றது நான் பார்த்தவரை ஒரே சமயத்தில் ஓரிரண்டைத்தவிர பின்னூட்ட பகுதி முழுக்க எந்த காலத்திலும் கும்மி பதிவுகளால் ஆக்கிரமிக்கப்பட்டில்லை (டோண்டு பிரச்சினை ஏற்பட்ட அந்த சில நாட்கள் தவிர) எனவே உயரெல்லைகள் என்று செயல்படுவதெல்லாம் செருப்புக்காக காலைவெட்டுவது போன்றது என்று நான் கருதுகிறேன், கடந்த ஒரு வாரம் அல்லது ஒரு மாதத்தில் திரட்டப்பட்ட பதிவுகளை எடுத்து புள்ளிவிபரம் எடுத்து கும்மி பதிவுகள் கணக்கை எடுத்து பார்த்தால் உண்மை நிலவரம் நமக்கு புரியலாம்.

//தமிழ்மணத்தின் சிறப்புகளில் ஒன்று, அது பின்னூட்டங்களை இற்றைப்படுத்துவது என்பதை மிகவும் நன்றாக உணர்ந்திருப்பதால், தமிழ்மணத்திலே கட்டுப்பாட்டைக் கற்றுத் தரும் முயற்சிக்கு மாற்றாக வேறு வழிகளில் நல்ல பதிவுகளையும்/ பின்னூட்டங்களையும் ஊக்குவிக்கவும் நாம் ஆராய்ந்து வருகின்றோம்.
//
இதை ஆராய்ந்து செய்யலாம்..... இன்றைக்கு இருக்கும் தொழில்நுட்ப வசதிகளில் அவசரமாக இதை செயல்படுத்துவதை விட தொழில்நுட்ப தீர்வுகளை பற்றி சிந்திக்கலாம்....

ப்ளாக்கர்.காம் மில் பதிவுகள் பற்றிய முறையீடு செய்யப்பட்டால் அதிகபட்சம் ஒரு எச்சரிக்கை(WARNING) செய்தி அந்த வலைப்பதிவை திறக்கும்போது வரும், மேற்கொண்டு படிப்பதும் படிக்காததும் வாசகர்களின் விருப்பம், இதை படிக்கலாம் இதை படிக்கக்கூடாது இது கும்மி பதிவு, இது உயர்ந்த பதிவு, இது நல்ல பதிவு என்றெல்லாம் வகைப்படுத்துதலும் தரப்பிரிப்பும் மேற்கொண்டால் இன்றைக்கு வெகுசன ஊடகங்களில் உள்ள மாய கட்டுப்பாடுகள் இந்த தளத்திலும் வந்து சேர்ந்து விடும் வாய்ப்பு உள்ளது. எல்லாம் இங்கே கிடைக்கும் என்பதுதான் வலைப்பதிவு உலகின் சிறப்பம்சமே, அங்கே கும்மிகளும் இருந்துவிட்டு போகட்டுமே, இன்றைக்கு கும்மி என்பது நாளை நகைச்சுவைக்கும், அதன் பிறகு எப்போ பார்த்தாலும் சாதி சாதி மதம் மதம்ன்னு பேசுறாங்கப்பா என்று அந்த பதிவுகளுக்கும் கட்சி கட்சினு அலையுறாங்கப்பா என்று அரசியல் பதிவுகளுக்கும், ஜாவா தொழில்நுட்பத்திற்கும், கட்டுமானப்பணி தொழில்நுட்பத்துக்கும் எனக்கும் என்ன தொடர்பிருக்கின்றது, பலர் அதை விரும்பி படிப்பதில்லை அப்படி அதில் விருப்பமுள்ளவர்களுக்கு தனியாக சென்று பார்த்துக்கொள்ளட்டும் என வேறு சில வகையான பதிவுகளுக்கும் கூட சிலர் கட்டுப்பாடுகள் விதிக்க கோரலாம்.

எல்லாம் இங்கே கிடைக்கும் என்பதுதான் வலைப்பதிவு உலகின் சிறப்பம்சமே, கட்டுப்பாடுகளின் மேல் கட்டுப்பாடுகளாக அந்த சிறப்பம்சத்தை நாம் குறைக்கிறோமா என்றும் யோசிக்கலாம்.

இவைகள் இந்த விடயத்தில் என்னுடைய கருத்துகளே, மற்றபடி தமிழ்மணம் செம்மையாக செயல்பட என் ஒத்துழைப்பு தொடர்ந்து இருக்கும்...

இந்த பின்னூட்டத்தை வெளியிட வேண்டுமென்று கூட அவசியமில்லை, செய்தி தமிழ்மண நிர்வாக குழுவிற்கு சென்றால் போதுமானது....

6:20 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://osaichella.blogspot.com/2007/03/horse-sacrifice.html

"அஸ்வஸ்ய சத்ர சிஷ்நந்து
பத்னி கிராக்யம் ப்ரசக்ஷதே..."

ஹரிகரரே இந்த சுலோகம் போதுமா? இதற்கு அர்த்தம் தெரியனுமா? கீழே முழுதும் படியுங்கள்.... எனக்கு தேவ பாஷையெல்லாம் தெரியாது, அதனால மேல என்னா எழுதியிருக்குன்னும் தெரியாது ஆனா அது தேவபாஷை தெரிஞ்சவா எழுதினா... இந்த சுலோகத்தின் பொருள், அஸ்வமேத யாகத்தில் நடந்த பாலியல் அக்கிரமங்கள் எல்லாம் கீழே...

சரி அஸ்வமேத யாகத்தை பார்க்கப்போகும் முன் ஒரு சில வார்த்தைகள்...

இந்துத்துவா வெறியர்களின் இரட்டை வேட செயல்பாடுகளில் ஒரு முக்கியமான விசயத்தை கவனிக்க வேண்டும், இப்படியாக வேத குப்பைகளையும், மனு நீதி அய்யோக்கியத்தனங்களை உரித்து உப்புக்கண்டம் போடும்போது, "இன்றைய இந்துமதத்தின் பெரும்பாலோர் அறியாத, தன் தகுதியினாலேயே வழக்கொழிந்துவிட்ட ஒரு தர்மத்தின் தீமைகளை விளக்கு விளக்கு என்று விளக்கித் தள்ளுவது புரிந்து கொள்ளக் கூடியதுதான்" என உள்நோக்கம் கற்பிப்பார்கள். இந்த காலத்தில் யார் இதெல்லாம் தெரிந்து வைத்திருக்கிறார்கள், மனுநீதியையும் வேதத்தையும் யார் படிக்கிறார்கள், யார் பின்பற்றுகிறார்கள் ஏன் குப்பையை கிளறுகிறீர்கள் என்பார்கள், கொஞ்சம் வேத, மனுதர்மத்தின் மீதான தாக்குதல்கள் அடங்கியவுடன் ஆரம்பிப்பார்கள் ஆகா வேதம் போல உண்டா.... அதில் உள்ள அற்புதங்களை பாருங்கள், அறிவியல், வரலாறு, புவியல் லொட்டு லொசுக்கெல்லாம் இருக்கிறது என்று ஆனந்த கூத்தாடுவார்கள், வேத குப்பைகளை கிளறி எடுத்து காண்பித்தால் "மறுபடியும் முதல்லருந்தா(வடிவேல் சொல்வது போல படிக்கவும்)" என்பது போல உடனே யார் இந்த காலத்தில் இதெல்லாம் பின்பற்றுகிறார்கள் என்பார்கள்....


"ஸதே விஷ்வா வசஸ
பதிந்திவஹா யயேகாஹா விபுஹீ....
அதிதீர்னினானாம் சபூர்யாஹா
நூதன மாவிலாசதீ
தம்வர்த்தினிஹீ அனுவாவ்முதே...."

அதாவது உலகம் என்பது ஒரு குடையின் கீழ் என்பதுதான் இந்த மந்த்ரத்தின் உள்ளீடு, அஸ்வமேதயாகமே வெற்றிக்காகவும் வெற்றியைக்கொண்டாடவும் ராஜாக்கள் செய்வது

POLITICAL UNITED/ FOR ALL BENEFITS/ FOR ELEMENT ALL SINS

........ இதற்காகத்தான் அஸ்வமேதம், அதாவது அடுத்தவரின் ராஜ்யத்தையெல்லாம் வென்று நமது ராஜ்யத்தை ஒருங்கிணைக்க வேண்டும். அனைத்து நற்பலன்களையும் அடைய அனைத்து பாவங்களையும் நீக்க வேண்டும், இதற்காகத்தான் அஸ்வமேத யாகம்,

ராஜா ஒரு ஆண் குதிரையை அவிழ்த்துவிட்டு அடித்து விடுவார்கள் அக் குதிரை எங்கெங்கு செல்கிறதோ அதன் பின்னாலேயே இந்த ராஜாவின் காலாட்படை ஆயுதங்களோடு திரண்டு பின் தொடரும்.....

குதிரை சென்று நிற்கும் இடம் வரை அந்த ராஜாவின் ஆளுகைக்கு உட்பட்ட இடமாக அறிவிக்கப்படும் , எதிர்த்து எவனாவது வந்தால் போர் இல்லையெனில் வெற்றி அறிவிப்பு. பின் அக்குதிரையை மையமாக வைத்தே அஸ்வமேத யாகம், வீரம் கலந்த இந்த யாகத்தில் ஒரு விரசத்தையும் வைத்திருக்கிறார்களே...

ஆமாம் ஓடிக்களைத்து வந்த ஆண் குதிரையோடு.... ஒரு பெண் குதிரையை இணை சேர்ப்பார்கள், அப்போது இயற்கை இன ஈர்ப்பு விசையின் உந்துதலால்... ஆண் குதிரையின் உறுப்பு நீண்டு நிற்கும்...

அந்த அஸ்வமேத இரவு விடிந்தால் மறுநாள் யாகம், முதல் நாள் இரவு முழுவதும் எந்த ராஜா இந்த யாகத்தை பண்ணுகிறானோ அவனது மனைவிகளில் ஒருத்தி இந்த குதிரையின் ஆணுறுப்பை கையில் பிடித்துக் கொண்டு இரவு முழுவதும் இருக்க வேண்டும்.

"அஸ்வஸ்ய சத்ர சிஷ்நந்து
பத்னி கிராக்யம் ப்ரசக்ஷதே..."

இந்த மந்த்ரமும் இதைத்தான் சொல்கிறது, இதன்பின் மறுநாள் அந்தக் குதிரை யாகத்தில் போட்டு எரிக்கப்படுகிறது.

ராத்திரி முழுவதும் அதன் உறுப்பை பிடித்துக்கொண்டிருந்தாளே ராஜாவின் மனைவி ராணி அவள்?

"எங்களுக்கு நீ யாகம் நடத்த தட்சணை கொடுத்தாய் மரியாதை கொடுத்தாய் ஆனால் இன்னும் ஒன்று பாக்கியிருக்கிறது, உன் மனைவியான அந்த ராணியை ஓரிரவு எங்களுக்கு தரவேண்டும், அப்போது தான் யாகம் நிறைவடையும்...அப்போது தான் யாகம் நிறைவடையும்".... என யாகம் நடத்துபவர்கள் கேட்கிறார்கள்.

அதன்படியே.. முதல்நாள் இரவு குதிரையின் உறுப்பை பிடித்துக்கொண்டிருந்தவள்... மறுநாள் இரவு யாகம் நடத்திய பிராமணர்களுடன் இருக்கிறாள்... இது தான் அஸ்வமேத யாகம்.

பக்கம் 105,106,107 சடங்குகளின் கதை, இந்து மதம் எங்கே போகிறது [2ம்- பாகம்] ஆசிரியர் அக்ன்ஹோத்ரம் தாத்தாச்சாரி

அஸ்வமேதயாகத்தை பற்றி முதல் பாகத்திலும் சொல்லியுள்ளார், இந்து மதம் எங்கே போகிறது நூறுபதிவுகளும் வலைப்பதிவில் கிடைக்கின்றது, இங்கே சென்று பார்க்கவும்

6:36 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://osaichella.blogspot.com/2007/03/horse-sacrifice.html

//இராமயணத்தில் தசரதன் அஸ்வமேத யாகம் நடத்தியபின்னரே இராமபிரான் கோசலைக்கும், பரதன் கைகேயிக்கும், லக்ஷ்மண-சத்ருக்னன் சுமித்திரைக்கும் மகன்களாக பிறக்கின்றனர்.
//
ஹரிகரரே அஸ்வமேத யாக லட்சனம் தான் தெரியுமே! அப்போ ராமருக்கும் தசரதருக்கு என்ன உறவு?? :-))))))))))))) அதுவும் அஸ்வமேத யாகம் நடத்திய பின் பிறக்கின்றனர் தசரதன் பிள்ளைகள் எல்லாம்.... ஹய்யோ ஹய்யோ..... :-)))

//அஸ்வமேத யாகத்திற்கும் அயோத்திக்கும், ராமாயணத்துக்கும் இல்லாத தொடர்பா?
//
ஹி ஹி

5:41 PM  

Post a Comment

<< Home